tag:blogger.com,1999:blog-540698976190851387.post2801443715100392438..comments2024-02-25T13:50:11.951+05:30Comments on Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: ஆடல் காணீரோS.Muruganandamhttp://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-540698976190851387.post-25412851935128528292008-07-13T14:02:00.000+05:302008-07-13T14:02:00.000+05:30ஜீவா ஐயா, சிறிது கால தாமதம் ஆகிவிட்டது அதற்காக மன்...ஜீவா ஐயா, சிறிது கால தாமதம் ஆகிவிட்டது அதற்காக மன்னிக்கவும். <BR/><BR/>ஆடையிலே எனை மணந்த மணவாளா என்பதற்கான விளக்கம் - சிறு பருவத்திலேயே என்னை ஆட்கொண்ட நாயக்னே என்பதாகும். ஆடுகையில் என்பது ஆடையில் என்று நின்றது. இது கவிஞர் பத்மதேவன் எழுதிய தினமும் ஒரு திருவருட்பா என்ற நூலில் கொடுத்துள்ள விளக்கம். <BR/><BR/>சிறு பிள்ளையாக இருந்த போதே வள்ளலார் சுவாமிகளை சிதம்பரம் கொண்டு சென்ற போது அவ்ரைப் பார்த்து சுவாமிகள் சிரித்த வரலாறு இங்கு நினைவு கூறத்தக்கது.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-43327056320602566102008-07-02T10:14:00.000+05:302008-07-02T10:14:00.000+05:30ஆடை என்பதற்கு இப்பிறவி என்பது பொருத்தமாகத்தான் படு...ஆடை என்பதற்கு இப்பிறவி என்பது பொருத்தமாகத்தான் படுகிறது. <BR/><BR/>ஆயினும் இறைவனுடன் நமது சம்பந்தம் ஏழேழு பிறவிக்கும் நிலைத்திருப்பது.<BR/><BR/>எதற்கும் மற்ற அன்பர்களுடன் விசாரித்து அதன் தத்துவார்த்தத்தை உங்களுக்கு எழுதுகின்றேன்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-33773852056234924782008-07-01T17:34:00.000+05:302008-07-01T17:34:00.000+05:30அதாவது, ஆடையை இந்தப் பிறவிக்கும், மணவாளனாக இறையையு...அதாவது, ஆடையை இந்தப் பிறவிக்கும், மணவாளனாக இறையையும் உருவகப் படுத்துகின்றன,<BR/>அல்லவா!, நன்றி.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-34937438811684571162008-07-01T17:14:00.000+05:302008-07-01T17:14:00.000+05:30பின்னூட்டம் என்பதால் அனைவரையும் எழுதுவது என்பது இய...பின்னூட்டம் என்பதால் அனைவரையும் எழுதுவது என்பது இயலாத காரியம் அல்லவா?<BR/><BR/>ஆயினும் தாங்கள் கேட்டதால் கூறுகின்றேன்.<BR/><BR/>பாவை பாடிய வாயால் கோவை பாடு என்று எம்பெருமானே கேட்டு திருக்கோவையார் பாடியவர் மாணிக்கவாசகர்.<BR/><BR/>திருவாசகத்தில் அவர் ஒரு பெண் சிறு பிள்ளையாயிருந்து மணம் ஆகும் வரையிலான அனைத்து நிலைகளிலும் உள்ள பெண்ணாக தன்னை பாவித்து பாவை விளையாடல்களாக <BR/>திருவெம்பாவை, திருஅம்மானை, திருபொற்சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருவுந்தியார், திருத்தோள்நோக்கம், திருபொன்னூஞ்சல், அன்னை பத்து, குயில் பத்து என்று பல்வேறு பதிகங்களை நாயகன் நாயகி பாவத்தில் பாடியுள்ளார்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-26475802241353297952008-07-01T15:56:00.000+05:302008-07-01T15:56:00.000+05:30எல்லோரையும் சொன்னீர்கள் மாணிக்க வாசகரை மறந்து விட்...எல்லோரையும் சொன்னீர்கள் மாணிக்க வாசகரை மறந்து விட்டீர்களா?Muruganarulhttps://www.blogger.com/profile/10763082322865823773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-91093807739765911402008-07-01T12:40:00.000+05:302008-07-01T12:40:00.000+05:30வாருங்கள் ஜீவா ஐயா.//ஆடையிலே எனை மணந்த மணவாளாஇதன் ...வாருங்கள் ஜீவா ஐயா.<BR/><BR/>//ஆடையிலே எனை மணந்த மணவாளா<BR/>இதன் பொருளை சற்றே விளக்கவும்//<BR/><BR/>ஜீவாத்மா ஆன நமக்கும், பரமாத்வாவான எம்பெருமானுக்கும் ஒன்பது விதமான சம்பந்தம் உண்டு.<BR/><BR/> அவனை குழந்தையாக பாவித்து வாத்சல்யத்துடன் பாடியவ்ர்கள் பெரியாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர். <BR/><BR/>அவனை நாயகனாக கொண்டு தன்னை நாயகியாகக் கொண்டு பாடினார் ஆண்டாள் நாச்சியார். <BR/><BR/>ஆனால் அதிகமான அன்பர்கள் பாடியது இறைவனை நாயகனாகவும் தம்மை நாயகியாகவும் பாவித்தே.<BR/><BR/>தேவாரம் பாடிய திருஞான சம்பந்தர், அப்பர் இவ்வாறு பல பாசுரங்களில் தம்மை நாயகியாக பாவித்தும், இறைவனை நாய்கனாக பாவித்தும் பதிகம் பாடியுள்ளனர் ( இதை ஆங்கிலத்தில் Bridal mysticism) என்று கூறுவார்கள். <BR/><BR/>ஆழ்வார்களில் திருமங்கையாழ்வார் தம்மை பரகாலநாயகியாகவும், வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபர் தம்மை பராங்குச நாயகியாகவும் பாவித்து பாசுரங்கள் பாடியுள்ளனர்.<BR/><BR/>அதைப் போலவே வள்ளலார் சுவாமிகளும் அம்பத்தில் கூத்தாடும் நடராஜப் பெருமானை தனது நாயகனாக பாவித்து பாடிய திருஅருட்பா இது.<BR/><BR/> எல்லோரும் அறிய என்னை மணந்து கொண்ட பெருமானே ( மணவாளா)என் கணவனே என்று பொது நடத்தரசை போற்றுகின்றார் வள்ளலார் சுவாமிகள்.<BR/><BR/>இந்த உலகில் பரமாதமா ஆன இறைவன் ஒருவனே ஆண் ( நாயகன்) மற்ற ஜீவாத்மாக்கள் அனைத்தும் பெண்களே.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-540698976190851387.post-33971302568702794392008-07-01T07:30:00.000+05:302008-07-01T07:30:00.000+05:30//ஆடையிலே எனை மணந்த மணவாளா//இதன் பொருளை சற்றே விளக...//ஆடையிலே எனை மணந்த மணவாளா//<BR/>இதன் பொருளை சற்றே விளக்கவும், ஐயா.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com