Friday, November 17, 2017

சுவாமியே சரணம் ஐயப்பா -1

முன்னுரை 



இப்பதிவுகளையும்  காணலாமே : 

      4   5   6   7   8   9   10  11   12   13   14   15   16   17   18   19   20   21 


கார்த்திகை மாதம் தொடங்குகின்றது ஐயப்பசுவாமிக்கு மண்டல பூசைக்கும், மகர விளக்கிற்கும் சுவாமியை  தரிசனம் செய்யச் செல்லும் பக்தர்கள் மாலை அணியும் புண்ணிய நாள். இந்நன்னாளில்  ஐயனின் பெருவழிப்பாதையில் சுவாமியுடன் பயணம் செய்ய தங்களை அழைக்கின்றேன். 

என்னடா சுவாமியுடன் பயணம் செய்ய அழைக்கின்றேன் என்று எழுதுகின்றீர்களே என்று யோசிக்கின்றீர்களா?  முறையாக விரதமிருந்து ஐயனை தரிசிக்கச் செல்லும் ஒவ்வொரு ஐயப்ப பக்தனும் சுவாமிதான்.  ஐயனின் ஆலயத்தின் முன்பு ’தத்வமஸி’ (தத் + த்வம் + அஸி) என்ற வாக்கியம் மின்னும் அதன் பொருள். நீ யாரைத் தேடிக்கொண்டு வந்தாயோ அதுவாகவே நீ இருக்கின்றாய்.  அதாவது ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறல்ல ஒன்று தான் என்ற அத்வைத உண்மை அது.  ஐயப்ப வழிபாட்டின் ஒரு சிறப்பு அம்சம் இதுதான், சாதி, மத, பேதம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் வந்து ஐயனை தரிசிக்கலாம். மாலையிட்ட அனைவரும் சாமிதான். எனவே அனைவரும்  சாமி என்றே அழைக்கப்படுகின்றனர். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பதையும் இங்கே நோக்க வேண்டும். ஜீவாத்மா பரமாத்மாவாக மாறுவதற்குத்தான் விரத முறைகளும் சரணாகதியும். சத்தியமான பொன்னு  பதினெட்டாம் படிகளில் ஏற முறையான விரதமும், இருமுடிக் கட்டும் அவசியம்.  

அவனருளால் தானே அவன் தாள் வணங்க முடியும். ஐயன் அடியேனை தன்னிடம் அழைத்தது  முதுமைக் காலத்தில். சிறு வயதிலேயே ஈடுபாடு இருந்தாலும் அழைத்துச் செல்ல யாரும் இல்லாததால் செல்ல முடியவில்லை. கல்லூரி முடித்து வேலையில் சேர்ந்த பிறகும் வெளி மாநிலங்களில் அதிகமாக பணி புரிந்த காரணத்தாலும்  சபரி மலைக்கு செல்ல முடியவில்லை. தற்போது அந்த பாக்கியம் கிட்டியது. அந்த ஆனந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவே இப்பதிவுகள். 

அடியேனுடைய குருசுவாமி ( உயர்திரு. M.K.பாபு) அவர்கள்  கூறுவார், சுவாமி எல்லாம் பூர்வஜென்ம கர்மாவினால் வருவது சிறு வயதிலேயே மலைக்கு வருபவர்கள்  சென்ற ஜென்மத்திலேயே ஐயனை வழிபட்டவர்களாக இருப்பார்கள் ஆகவே அவர்களுக்கு   அது சித்திக்கின்றது.  ஐயன் அழைத்தானே என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள். அதுதான் உண்மை. யாருக்கு எப்போது எவ்வாறு அருள வேண்டும் என்பதை அவன் அறிவான்.

இனி வரும் பதிவுகளில் ஐயப்பன்  வரலாறு. ஐயனின் ஆறு ஆதாரத்தலங்கள்  இருமுடியின் தத்துவம். பதினெட்டாம் படிகளின் பெருமை, விரத முறை, பெருவழிப்பாதை யாத்திரை என்று ஐயப்பனுடன் தொடர்புடைய பல்வேறு செய்திகளை அறிந்து கொண்ட வகையில்  பகிர்ந்து கொள்கிறேன் தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.






ஹரிஹரபுத்ரன் எவ்வாறு என்பதற்கு குருநாதர் தரும் விளக்கம். விளையாட்டாக உலகைப் படைத்து அருள்வயப்படுத்த பிரம்மமே சிவம்- சக்தி என்று இரு கூறுகளாக பிரிந்தது. அவ்வாறு பிரிந்த சிவமும் சக்தியும் மீண்டும் இணைந்தன. மஹாவிஷ்ணு அம்பாளின் அம்சம். ஆகவேதான் அர்த்தநாரீஸ்வரரில் அம்பாள் வாம பாகத்தில் இருப்பது போல் சங்கரநாராயணரில் விஷ்ணு இடப்பாகம். எனவேதான் அம்பாள் விஷ்ணு சகோதரி என்பது ஐதீகம்.


குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா

ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .

7 comments:

வெங்கட் நாகராஜ் said...

ஸ்வாமி சரணம்.... தொடர்கிறேன்.

S.Muruganandam said...

சுவாமி சரணம். தொடர்ந்து வாருங்கள் ஐயா.

Anuprem said...

மிக அருமையான தொடக்கம்....

சுவாமியே சரணம் ஐயப்பா...!

கோமதி அரசு said...

சுவாமி ஐயப்பனின் புனித வரலாறு அருமை.
தரிசனம் செய்ய தொடர்கிறேன்.

கோமதி அரசு said...

சுவாமியே சரணம் ஐயப்பா

S.Muruganandam said...

சுவாமி சரணம். தொடர்ந்து வாருங்கள் பிரேமா அனுராதா அம்மா.

S.Muruganandam said...

சுவாமி சரணம்.
தொடர்ந்து வாருங்கள் கோமதி அரசு அம்மா.