Wednesday, October 18, 2017

நவ துவாரகை யாத்திரை - 28

                                                                                         
  அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்   


தீபாவளியன்றுதான் (அமாவாசை) கேதாரகௌரி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இவ்வருடம் அமாவாசை நாளை 19.10.2017 வருவதால் நாளை  விரதம் அனுஷ்டிப்பது உத்தமம். 

கேதாரகௌரி விரத மகிமையைப் பற்றி அறிந்து கொள்ள இங்கு செல்லுங்கள்


                                                             கேதார கௌரி விரதம்
                                         *******


                                    அகமதாபாத் சுற்றுலா -2 


                                 பாலாஜி ஆலயம் 


இத்தொடரின்  மற்ற  பதிவுகள் 

   1   2   3   4    5     6    7    8    9    10    11    12  

13    14   15   16   17   18   19   20    21   22   23   24   25   26    27




மறு நாள் மாலை விமானம் என்பதால் காலை பாலாஜி மந்திர் என்றழைக்கப்படும் திருவேங்கடவன் ஆலயம் சென்றோம். திருப்பதியில் உள்ளது போலவே விமானம், விமான வெங்கடேஸ்வரர், பிரம்மாண்ட கருடன் மற்றும் அனுமன் சிலைகள் என்று எழிலாக அமைந்திருந்தது ஆலயம். பிரம்மாண்ட விஸ்வரூப விஷ்ணு சிலையும் ஆலயத்திற்கு மெருகூட்டியது. ஆலயத்தில் திருப்பதியில் உள்ளது போலவே பூசைகள் டைபெறுகின்றனவாம். உற்சவர், வாகனங்கள் உள்ளன, பிரம்மோற்சவமும் டைபெறுகின்றது என்றார்கள். வேங்கடவனின் சன்னதியின் இரு புறமும்  அலர் மேல்   மங்கைத் தாயாருக்கும், ஆண்டாளுக்கும் சன்னதிகள் உள்ளன.  விசாரித்த போது திருப்பதிக்கும் இக்கோவிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஒரு தனியார் அமைப்பின் மூலம் திருப்பதி போலவே ஆலயம் அமைக்க வேண்டும் என்று விரும்பிய அன்பர்கள் சிலர் இணைந்து பொது மக்களின் ன்கொடை மூலம் இவ்வாலயத்தை கட்டி பராமரித்து வருகின்றனர் என்றனர். திருப்பதியில் நடைபெறுவது போலவே பூசைகள் நடைபெறுகின்றன. பிரம்மோற்சவத்திற்கான வாகனங்களும் உள்ளன.



அருகிலேயே வித்தியாசமாக டெல்லியில் உள்ள தாமரை ஆலயம் போல ஒரு கட்டிடம் இருந்தது அது என்ன என்று கேட்ட போது ஒரு யோகா பல்கலைக் கழகம் என்றார்கள். உள்ளே சென்று பார்க்கலாம என்று வினவிய போது செல்லலாம் என்று ஒரு அரங்கத்திற்கு அழைத்துச் சென்றார்கள். மது உடலில் உள்ள சக்கரங்கள், பல்வேறு யோகாசனங்களை பற்றிய விளக்கங்கள், யோகாவின் பலன்கள் என்று பல உபயோகமான தகவல்களை பகிரும் பாதாகைகள் அவ்வரங்கில் இருந்தன. அவற்றை பார்த்துவிட்டு வந்தோம்.










விமான வெங்கடேஸ்வரர் 

யோகா பல்கலைக்கழகம்

அடுத்து படிக்கிணறு செல்லலாம் என்று வண்டி ஓட்டுனர் கூறினார். ஆகவே அகமதாபாதிற்கு அருகில் உள்ள அடலெஜ் (Adalej Step Well) என்ற ஊரில் உள்ள  படிக்கிணற்றை பார்க்கச் சென்றோம். வருடத்தில் தென்கிழக்கு பருவமலை சமயத்தில்  மூன்று மாதங்கள் மட்டுமே மழை பெய்யும் என்பதால் வருடம் முழுவதற்குமாக  தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ள வேண்டி குளங்களை அழகிய வேலைப்பாடுகள் கொண்ட படிக்கிணறுகளாக இப்பகுதியில் அமைத்தனர். பாலைவனம் மற்றும் அதையொட்டி அமைந்துள்ள குஜராத் மற்றும் இராஜஸ்தான் பகுதிகளில் இவ்வாறு சுமார் 120 படிக்கிணறுகள் அமைந்துள்ளன. இக்கிணறுகளை இவர்கள் வாவ்(Vav) என்றழைக்கின்றனர். (தமிழில் வாவி என்றழைப்பதுடன் ஒத்துச் செல்கின்றதா?) முதலில் விசவாடா மூலதுவாரைக்கு அருகில் ஒரு ஞான  வாவியைப்  பார்த்தோம் அல்லவா? அன்பர்களே. இக்கிணறுகளின் அருகாமையில் அக்காலத்தில் விழாக்கள்  சிறப்பாகக்  கொண்டாடப்பட்டுள்ளன..



இக்கிணற்றை ஒட்டியும் ஒரு கதை உள்ளது அது என்னவென்று காணலாமா?  இக்கிணறு உருவாகக் காரணமாக இருந்தவர் ருடா பாயி என்ற ஒரு அரசி என்வே இக்கிணறு ருடாபாய் வாவ் என்றும் அழைக்கப்படுகின்றது. பதினைந்தாம் நூற்றாண்டில்,   தந்தாய் தேசம் இப்பிரதேசத்தை இராணா வீர் சிங் என்ற வகேலா வம்ச இந்து அரசன் ஆண்டு  ந்தான் அவனே 1498ம் ஆண்டில் இக்கிணற்றை வெட்ட ஆரம்பித்தான். இடையில் அண்டைய தேசத்தை சேர்ந்த முகமது பெகாதா என்ற அரசன் படை எடுத்து வந்தான் போரில் வீர் சிங் வீர மரணமடைந்தான். பேரழகியான அரசியின் அழகில் மயங்கிய முகமது அவளை மணந்து கொள்ள விரும்பினான். அரசியும் ஒரு என் கணவர் கட்டத் துவங்கிய கிணற்றை முடித்தால் பின்னர் மணம் செய்து கொள்கிறேன் என்று  நிந்தனை விதித்தாள். அரசனும் வெகு சீக்கிரத்தில் கிணற்றின் கட்டுமானத்தை முடித்தான். ஆனால் கிணற்றின் கட்டுமானம் முடிந்த பின்னர் அரசி  தன்னுயிரை தானே எடுத்துக்கொண்டாள். முகமதுவும் அரசியின் கனவான கிணற்றை நாசம் செய்யாமல் சென்று விட்டதால் அருமையாக வேலைப்பாடுகளுக்கு உதாரணமான இக்கிணறு இன்றும் சிறப்பாக  விளங்குகின்றது. 



அட்லெஜ் படிக்கிணறு



ந்த அடலெஜ் கிணறு சோலங்கி பாணியில் எண்கோண அமைப்பில் ஐந்து நிலை கிணறாக எழிலாக அமைந்துள்ளது. சிற்பக் கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இக்கிணறு.  காற்று வரவும், மக்கள் கூடவும்  ஏதுவாக அருமையாக அமைக்கப்பட்டுள்ளது.   வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கும்படி ஆழமாகவும் அதே சமயம் நீரின் மட்டம் உயரும் போதும் மக்கள் தண்ணீர் சுமந்து செல்ல ஏதுவாக ஐந்து நிலைகளை அமைத்துள்ளனர். ஒவ்வொரு நிலையிலும் காற்று வர அருமையான சாளரங்களும்,  மக்கள் கூட முற்றங்களும் அமைந்திருப்பது இக்கிணற்றின் சிறப்பு. ஒரு அருமையான கலை பொக்கிஷத்தை பார்த்த திருப்தியுடன்  விடுதிக்கு திரும்பினோம். வண்டி ஓட்டுனரிடம் குஜராத் இனிப்புகளுக்கு பெயர் போனதல்லவா?  எக்கடையில் ல்ல இனிப்புகள் கிடைக்கும் என்று கேட்டு அக்கடைக்கு சென்று இல்லத்தில் உள்ளவர்களுக்காக இனிப்புகள் வாங்கிக் கொண்டு மாலை விமானம் மூலம் சென்னை வந்தடைந்தோம்.


அற்புதமான கலைநுட்பம் 




அவனருளால் இந்த யாத்திரை ஒரு அருமையான பரிபூரண யாத்திரையாக அமைந்தது. எந்த வகையிலும் சிறு குறைபாடும் ஏற்படவில்லை. தரிசிக்க நினைத்த அனைத்து ஆலயங்களில் அனைத்திலும் அருமையான தரிசனம் கிட்டியது. பல ஆலயங்களில் ஆரத்தி தரிசனமும் கிட்டியது. வண்டியில் சென்றதால் எங்கும் அதிகமாக காக்க வேண்டி இருக்கவில்லை. வதுவாரகைகள் தவிர  அதிகப்படியாக சில ஆலயங்களையும் சேவித்தோம். மேலும் புஷ்டி மார்க்கம், வல்லபாச்சார்யார், ஸ்வாமி நாராயண், ஜலாராம் பாபா முதலிய குஜராத்தின் ஆச்சார்யர்களைப் பற்றி அறிந்து கொண்டோம். புஷ்கர் தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. இதைப் படிக்கும் அன்பர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணரின் தரிசனம் கிட்டவேண்டும் என்று வேண்டிக்கொள்ண்டுகிறேன். இத்துடன் இநத யாத்திரையின் பதிவுகள் நிறைவு பெறுகின்றன.  வந்து படித்த அன்பர்கள் மற்றும் பின்னூட்டமிட்ட அன்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. மீண்டும் ஒரு யாத்திரையுடன் பின்னர் சந்திப்போம் அன்பர்களே. 

*************************

Monday, October 16, 2017

நவ துவாரகை யாத்திரை - 27

அகமதாபாத் சுற்றுலா -1 

சபர்மதி ஆசிரமம் 

இத்தொடரின்  மற்ற  பதிவுகள் 

   1   2   3   4    5     6    7    8    9    10    11    12  

13    14   15   16   17   18   19   20    21   22   23   24   25   26   28

வண்டி ஓட்டுநர் கூறிய அறிவுறையின் பேரில் முதல் நாளே டாகோர் துவாரகை சென்று விட்டு பிறகு  துவாரகை சென்றதால் அகமதாபாதில் ஒரு நாள் அதிகமாக கிட்டியது. அகமதாபாதிலிருந்து சென்னைக்கான விமான டிக்கெட் முதலிலேயே பதிவு செய்திருந்ததினால் இரண்டு  நாட்கள் அகமதாபாதில் உள்ள சில இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். திரு. படேல் அவர்கள் இல்லம் சென்று அவருக்கு ன்றி கூறினோம். அகமதாபாதில் முதலில் காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றோம்.



வாழ்க நீ! எம்மான்இந்த வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க
வாழ்க!
  - 

என்று பாரதியார் போற்றிய தேசப்பிதா மகாத்மா காந்தி 1918 முதல்  1933 வரை  அன்னை கஸ்தூரிபாய் அவர்களுடன் இவ்வாசிரமத்தில் வசித்தார். முதலில் சாத்தியாகிரக ஆசிரமம் என்றழைக்கப்பட்டது.  1930 உப்பு சத்தியாகிரகத்திற்காக காந்தியடிகள்  தண்டி யாத்திரை மேற்கொண்டது இங்கிருந்துதான்.

சபர்மதி ஆறு 



காந்தியடிகள் தங்கிய அறை 

சபர்மதியாற்றின் கரையில் இவ்வாசிரமம் அமைந்துள்ளது. ஆசிரமம் தேசிய நினைவுச் சின்னமாக விளங்குகின்றது.   அகமதாபாதும் ஒரு பெரிய கரம்தான் அதில் ஓடும் ஆற்றை எவ்வளவு சுத்தமாக வைத்துள்ளனர். அதுவும் ஆசிரமத்தை ஒட்டி ஆற்றங்கரையில் அருமையான பூங்காவும் அமைத்துள்ளனர். ஆசிரமத்தில் காந்தியடிகள் தங்கிய அறை, அவர் நூல் நூற்ற இராட்டை, அவர் எழுத பயன்படுத்திய சிறு மேசை. அவருடைய வாழ்வுடன் தொடர்புடைய பல நிகழ்வுகளின் புகைப்படங்கள், மது சுதந்திர போராட்டத்தின் பல்வேறு  புகைப்படங்கள்  ஆகியவற்றை பார்த்து இரசித்தோம். ஆங்கில ஏகாதிபத்தியத்தை அகிம்சை என்ற ஆயுதத்தை கொண்டு வீழ்த்திய மகான் எவ்வளவு எளிமையாக வாழ்ந்திருக்கிறார் என்பதைப் பார்த்து ஆச்சிரியப்படாமல் இருக்க முடியவில்லை.  ஆசிரமத்தின் விற்பனை நிலையத்தில் சில நினைவு பரிசுகள் வாங்கினோம். ஆசிரமத்தின் உள்ளே நுழைந்தாலே மனதில்  ஒரு அமைதி தவழ்வதை இன்றும் உணர முடிகின்றது. ஆசிரமத்தை சுற்றிப் பார்த்து விட்டு அடுத்து எங்கு சென்றோம் தெரியுமா அன்பர்களே?.





குஜராத்தி உணவை முழுவதுமாக சுவைக்க ஒரு ல்ல உணவகத்திற்கு அழைத்து செல்லுமாறு வண்டி ஓட்டுனரிடம் கூறினோம் அவரும் ஒரு உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். சிறு பூரி தொடங்கி பல வகையான பூரிகள், சப்பாதிகள், இனிப்புகள் என்று சுமார் 32 வகைகள் கொண்ட அவ்வுணவை இரசித்தோம். அவ்வுணவகத்திலும் கோவர்த்தனகிரிதாரி கண்ணன் இருந்தான். மனத்திருப்தியுடன் அடுத்து அறிவியல் மையம் சென்றோம்.  

வண்டி ஓட்டுநர் 


கோவர்த்தன கிரிதாரி 



அகமதாபாத் கரத்தின் ஒரு சிறப்பு அம்சம் இந்த அறிவியல் மையம் ஆகும். அறிவியல் உண்மைகளை எளியவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இம்மையத்தை அமைத்துள்ளனர். கோளரங்கம் ஒன்றும்  இம்மையத்தில் அமைந்துள்ளது. மேலும் சூரிய குடும்பத்தில் ஒரு சுற்றுலா (Journey through Solar system), அண்டவெளி (Hall of Space), பூமிக்கோள் (Planet Earth Pavilion), வாழ்வியல் பூங்கா (Life Science Park), சக்தி கல்வியியல் (Energy Education), மின்சாரம் (Electrodome) என்று பல பெரிய அரங்ங்கள் இவ்வறிவியல்   மையத்தில் உள்ளன. அனைத்தையும் முழுதுமாக பார்க்க வேண்டுமென்றால் பல மணி நேரம் பிடிக்கும், நேரமின்மையால்  அவற்றை அவசரமாகச்  சுற்றி வந்தோம், ஒரு விண்கலம்  வழியாக விண்வழியில் (Space) பயணம் செய்து  சூரிய குடும்பத்தை சுற்றி வந்தோம். கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது ஆனால் அருமையான அனுபவமாக இருந்தது. 5 பரிமாண  திரைப்படம் பார்த்தோம். அதில் நாங்கள் ஒரு அதி வேக  தொடர் வண்டியில் பயணம் செய்யும்  போது ஏற்படும் அனுபவங்களை உணர்ந்தோம். வண்டி அதி வேகத்தில் ஓடும் போது அதன் அதிர்வு, மல்லிகைத் தோட்டத்தில் இடையே செல்லும் போது மல்லிகையின்  மணம், ஒரு அருவியின் ஊடே செல்லும் போது தண்ணீர்ச் சிதறல் என்று ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. மன அமைத்திக்காக  இசை நீரூற்றும் (Music Fountain) உள்ளது. மாலை திரு, பட்டேல் அவர்கள் இல்லம் சென்று அவருக்கு ன்றி தெரிவித்துவிட்டு வந்தோம். 

                                            நவ துவாரகை யாத்திரை தொடரும் . . . 

Sunday, October 15, 2017

நவ துவாரகை யாத்திரை - 26

புஷ்கர்

இத்தொடரின்  மற்ற  பதிவுகள் 

   1   2   3   4    5     6    7    8    9    10    11    12  


13    14   15   16   17   18   19   20    21   22   23   24   25   27   28


கங்ரோலியிலிருந்து அடுத்து அடியோங்கள் புஷ்கர் என்னும் தலத்திற்கு பயணம் செய்தோம். இத்தலத்தின் சிறப்புகளாவன.
“நீர் வானம் மண் எரிகலனாய் நின்ற நெடுமால்“ என்றபடி பெருமாள் அனைத்துமாய் நிற்கின்றார், இத்தலத்தில் அவர் தீர்த்தரூபியாய் அருள் பாலிக்கின்றார்.  அப்புனித புஷ்கரணி இத்தலத்தின் மையத்தில் அமைந்துள்ளது.
புஷ்கரம்  பெருமாள் தானாகவே எழுந்தருளிய  ஸ்வயம்வக்த ஸ்தலங்களுள்   ஒன்றுமற்ற தலங்கள்  ஸ்ரீரங்கம்,  ஸ்ரீமுஷ்ணம்,  திருப்பதி,  வானமாமலை,  சாளக்கிராமம்,  நைமிசாரண்யம்,  பத்ரிகாச்ரமம்   ஆகியவை ஆகும்
புஷ்கர் ஏரி

பிரம்மாவிற்கு தனிக்கோவில் இத்தலத்தில் அமைந்துள்ளது.
கார்த்திகை பௌர்ணமியை ஒட்டி ஐந்து நாட்கள் திருவிழா டைபெறுகின்றது அப்போது டைபெறும் கால்டை சந்தை உலக  பிரசித்தம் பெற்றது.
இராமபிரான் தசதரதருக்கு பித்ரு காரியம் செய்த தலம், காந்தியடிகள், இந்திரா காந்தி ஆகியோர்களின் அஸ்தி கரைக்கப்பட்ட தலம். வாருங்கள்  அன்பர்களே இவ்வளவு சிறப்பு பெற்ற  புஷ்கரில் நீராடி பிரம்மனை தரிசிக்கலாம்.



இராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தில்,  அஜ்மீரிலிருருந்து      11 கி.மீதொலைவில் பாலைவனத்தின்  விளிம்பில் உள்ள அமைதியான நகர் புஷ்கர்.   நாகமலை அஜ்மீருக்கும் புஷ்கருக்கும் இடையே இயற்கை எல்லையாக
உள்ளது.


இத்தலத்தின் மையத்தில் உள்ள புஷ்கர் ஏரி உருவானதற்கான ஒரு சுவையான கதை உள்ளது அது என்னவென்று காணலாமா அன்பர்களே.  பூவுலகில் ஒரு  யாகம் செய்வதற்கு உரிய இடம் ஒன்றைத் தேடி பிரம்மா அலைந்தபோதுஓரிடத்தில் சிந்தனையில் மூழ்கியிருந்தாராம் ப்போது அவருடைய கரங்களில் இருந்து ஒரு தாமரை மலர் தரையில் விழுந்ததும்மூன்று இடங்களில் நீரூற்று பீறிட்டது. புஷ்கரம் எனில் தாமரை என்றும் பொருள் உண்டுபூமி பிளந்து மூன்று இடங்களில் ஜேஷ்ட புஷ்கரம்மத்ய புஷ்கரம்கனிஷ்ட புஷ்கரம் என உண்டாகஅவற்றில் பிரம்மாவிஷ்ணுசிவன் உறைவதாகக் கூறப்படுகிறது அவற்றில் ஒன்று தான் பிரம்மா வேள்வி செய்த புஷ்கர். எனவே தாமரை விழுந்த்தால் உருவான  இத்தடாகம் புஷ்கர் என்றழைக்கப்படுகின்றது.


மண்ணார்நீர்எரிகால் மஞ்சுலாவும்ஆகாசமுமாம்
புண்ணாராக்கைதன்னுள் புலம்பித்தளர்ந்து எய்த்தொழிந்தேன்
விண்ணார்நீள்சிகர விரையார்திருவேங்!கடவா
அண்ணா! வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே. (பெ.தி 1-9-7)

என்றபடி தீர்த்த நாராயணனாக எம்பெருமான் அருள் பாலிக்கும்  இந்த புஷ்கர்  ஏரியில் கார்த்திகை மாதம் சுக்ல பட்சத்தில் மூழ்கிவராக மூர்த்தியை தரிசித்தால் முக்தி நிச்சயம்நூறு வருடங்கள் தவம் செய்த பலன் கிட்டும் என்பது ஐதீகம்.  புனிதமாக‌க் கருத‌ப்படு‌ம் புஷ்க‌ர் ஏரியில் 52 படித்துறைகள் உள்ளனஇங்கு பக்தர்கள் எந்த நேரமும் புனித நீராடுகின்றனர்.




அடியோங்கள் முதலில் புஷ்கர் ஏரிக்குச் சென்றோம். உடனே பண்டாக்கள் எங்களை சூழ்ந்து கொண்டனர். புஷ்கரின்  கரையில் பித்ரு கடன் செய்வது மிகவும் சிறப்பு  என்பதால் அக்கடமையை முதலில் முடித்தோம். பின்பு   புஷ்கரணியில் ஆனந்தமாக நீராடினோம். பின்னர் பிரம்மாவை தரிசிக்க சென்றோம்.    

இவ்வூரில் மட்டும் பிரம்மாவின் ஆலயம் அமைந்திருப்பதற்கான காரணம் என்ன என்பதற்கும் ஒரு கதை உள்ளது அது என்ன என்று காணலாமா அன்பர்களே.  புஷ்கரின் கரையில் யாகம் செய்ய  அமர்ந்த பிரம்ம தேவர் யாகத்தில் உடன் அமர  சாவித்திரியை(சரஸ்வதி) அழைத்து வர நாரதரை அனுப்புகின்றார். நாரதர் செய்த கலகத்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு சாவித்திரி வராமல் போக பிரம்மன் காயத்ரி என்ற குஜ்ஜர் இனப் (இடைக்குல)பெண்ணை திருமணம் புரிந்து கொண்டு யாகத்தை துவங்குகின்றார். தாமதமாக வந்து சேர்ந்த சாவித்திரி சாபம் கொடுக்க பிரம்மாவிற்கு வேறெங்கும் கோவில் இல்லாமல் போனது. இக்கோவிலிலும் பூஜைகள் கிடையாது.


முப்புறமும் மலைகள் சூழ்ந்த புஷ்கரில் கோயில்கள் ஏராளம்இவற்றில் முக்கியமானது பிரம்மா ஆலயம்நாட்டில் பிரம்மாவுக்குள்ள ஒரே கோயில் இதுதான் என்பது  இதன் ற்றொரு ‌சிறப்பு. இ‌ந்த கோ‌யி‌ல் செந்நிறத்தில் கூரான கோபுர‌த்தை‌க் கொ‌ண்டது. உயரத்தில் அமைந்துள்ளது ஆலயம் பல படிகள் ஏறிச் செல்ல வேண்டும். தலைவாசலில் பிரம்மாவின் வாகனமான அன்னம் அழகிய சிலையாகக் காட்சி தருகிறது. நான்முகன் அருகிலேயே காயத்ரி தேவி வீற்றிருக்கிறாள்ஆலய முன்முக மண்டபம் சலவைக்கல்லால் ஆனதுபிரார்த்தனை செய்து கொண்டு பக்தர்கள் பதித்து வைத்த வெள்ளி நாணயங்களை இம்மண்டபம் முழுவதும் காணலாம்தரையில் பதிக்கப்பட்ட இந்த நாணயங்கள் பக்தர்கள் கால்கள் பட்டு தேய்வது போல தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களும் தேய்ந்து விடும் என்பது நம்பிக்கைபிரம்மாவை திவ்யமாக சேவித்தோம்.
பிரம்மாவின் முதல் மனைவி சாவித்திரிக்கு  ஒரு கோயில் இ‌ங்கு‌ள்ளது.  இது பிரம்மனின் கோயிலுக்குப் பின்னால் உள்ள மலையின் மீது அமை‌ந்து‌ள்ளதுகோ‌யிலு‌க்கு ப‌க்த‌ர்க‌ள் எ‌ளிதாக  ஏறிச் செல்லு‌ம் வகை‌யி‌ல் படிகள் அமை‌க்க‌ப்ப‌ட்டு உள்ளனமாபாதகங்களைத்      தீர்க்கும் அருட்சக்தியாக     அன்னை விளங்குகிறாள்கெளதம முனிவரால் சபிக்கப்பட்ட அகலிகை இவ்விடத்தில்தான் ராமபிரானால் சாபவிமோசனம் பெற்றாள்விஸ்வாமித்திரர் தவம் செய்த இந்த இடத்தில் அகத்தியரின் குகையும் உள்ளது.  கோயிலில் இருந்து ஏரியையும் சுற்றியுள்ள பாலைவனப் பரப்பையும் கா‌ண்பது  அனைவரது உ‌ள்ள‌த்தையு‌ம் கொ‌ள்ளை கொ‌ள்ளு‌ம் எழிலான  கா‌ட்‌சியாகு‌ம்.




பிரம்மா மற்றும் சாவித்திரி ஆலயம் மட்டுமல்லாமல் வராஹ மூர்த்தியின் ஆலயமும், தென்னிந்திய இராஜகோபுரம் மற்றும் கட்டிடகலை அமைப்பில் அமை‌ந்த ரங்ஜீ ஆலயம் (அரங்நாதர்) ஆகியவை புஷ்கரில் தரிசிக்க வேண்டிய ஆலயங்கள் ஆகும். அடியோங்களுக்கு வராஹர் ஆலயம் சென்று தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது.

அமைதி  தவழும் புஷ்கரில், அ‌க்டோப‌ர்-நவ‌ம்ப‌ர்  மாத‌த்‌தி‌ல்  வரு‌ம் கா‌ர்‌த்‌திகைப்  பெள‌ர்ண‌மி ‌உ‌ற்சவ‌ம்  வெகு ‌சிற‌ப்பாக  கொண்டாடப்படுகின்றது. தீபாவளியை அடுத்து பத்து நாட்கள் கழித்து ஐந்து நாட்கள் டக்கும் இ‌ந்  உற்சவ‌த்‌தி‌ன் போது இ‌ந்நகரமே ‌விழா‌க் கோல‌ம் பூணு‌கின்றது.   ஆதி காலத்தில் புஷ்கரில் எப்போது  நீராடினாலும் அவர்கள் சொர்க்கத்தை அடைந்தனராம், எனவே சொர்க்கம் நிறைந்து விட, யமன் வேண்ட  கார்த்திகை மாதம் வளர்பிறை ஐந்து நாட்கள் புஷ்கரில் நீராடுபவர்கள் மட்டுமே சொர்க்கம் அடைவர் என்று பிரம்மா மாற்றினார். எனவே அந்த ஐந்து நாட்கள் உற்சவம் கொண்டாடப்படுகின்றது. அச்சமயம் லட்சக்கணக்கான   ம‌க்க‌ளின் ஆரவாரம் அலைமோதும், பிரம்மாண்டமான கால் நடைசந்தையும் குறிப்பாக ஒட்டக சந்தை அப்போது சிறப்பாக  நடைபெறுகிறது.  இந்தப் புஷ்கர் மேளாவின் போது வண்ண வண்ணக் கடைகள் பு‌திதாக  தோ‌ன்று‌‌கி‌ன்றன. இவைதா‌ன்  உ‌ற்சவ‌த்‌தி‌ன் மு‌க்‌கிய நாயகமாக‌ ‌விள‌ங்கு‌கி‌ன்றன.   இசை ‌நிக‌ழ்‌ச்‌சிகளு‌ம்,  நடன ‌நிக‌ழ்‌ச்‌சிகளு‌ம் க‌ண்களையு‌ம், காதுகளையு‌ம் கு‌ளி‌ர்‌வி‌க்‌கி‌ன்றன. 

உ‌ற்சவ‌த்‌தி‌ன்  ம‌ற்றுமொரு  அ‌ம்சமாக  நாவில் நீர் ஊறச் செய்யும் பாரம்பரியத் திண்பண்டங்களும் விற்கப்படுகின்றன. வண்ண வண்ண உடைகள் அணிந்த கிராம மக்கள் விழாவுக்கு மெருகூட்டுகின்றனர். இந்த அழகான பின்னணியில், கவர்ச்சிகரமான பொம்மலாட்டம் உட்பட ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கால்நடைகள் ஏலம் விடப்படுவது, ஒட்டகப் பந்தயங்கள், குதிரை  ஆகியவை கொண்டாட்டங்களுக்குப் பொலிவூட்டுகின்றன. இக்கொண்டாடத்தைக் காண வெளிநாட்டினர் பலர் புஷ்கர் வருகின்றனர்.



இவ்வாறு அவனருளால் தரிசிக்க நினைத்த அனைத்து ஆலயங்களிலும்  அருமையான தரிசனம் பெற்றது மட்டுமல்லாமல் அதிகமான ஆலயங்களையும் தரிசித்த மகிழ்ச்சியில் அகமதாபாத் கிளம்பினோம். யாத்திரை முடித்து இல்லம் திரும்புகிறோம் என்ற மகிழ்ச்சியில் வண்டி ஓட்டுரும் உற்சாகமாக வண்டியை ஓட்டிக்கொண்டு வந்து அகமதாபாத் சேர்த்தார். அகமதாபாதில் இரண்டு நாட்களில் எந்தெந்த இடங்களைச் சுற்றிப் பார்த்தோம் என்று அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே

                                                                                 
                                                                                   நவ துவாரகை யாத்திரை தொடரும் . . .