Thursday, September 21, 2017

ஸ்ரீசக்ர நாயகி - 2

முதல் ஆவரணம்


புலியூர் பாரத்வாஜேஸ்வரர்  ஆலயம் 
சொர்ணாம்பாள் சிசு ரூபிணி திருக்கோலம்


கண்ணாடி பல்லக்கில்  சொர்ணாம்பாள் 


ஸ்ரீசக்ர கோலம் 


சாரதா தேவி ஆலயம் 

கிரிக்கெட் போட்டி 



மகாலிங்கபுரம் பிரஹத் சுந்தர குஜாம்பாள்
புவனேஸ்வரி அலங்காரம் 

* * * * * * * *
முதலாவது ஆவரண கீர்த்தனம்

ராகம் - ஆனந்தபைரவி                                                                               தாளம்- த்ரிபுட

பல்லவி

கமலாம்பா ஸம் ரக்ஷது  மாம்
ஹ்ருத் கமலா நகர நிவாஸிநீ.... (கமலாம்பா)

அநுபல்லவி

ஸுமநஸாராதிதாப்ஜமுகீ ஸுந்தர மந: ப்ரியகர ஸகீ
கமலஜாநந்த போத ஸுகீ காந்தா தார பஞ்ஜார ஸுகீ..... (கமலாம்பா)

சரணம்

த்ரிபுராதி சக்ரேஸ்வரீ  அணிமாதிஸித்தீஸ்வரி
நித்ய காமேஸ்வரி க்ஷிதிபுர த்ரைலோக்ய மோஹநசக்ர வர்த்திநீ
ப்ரகட யோகிநீ  ஸுரரிபு மஹிஷாஸுராதி மர்த்தினீ
நிகம புராணாதி ஸம்வேதினீ

மத்யமம் 

த்ரிபுரேசீ குருகுஹஜனனீ த்ரிபுர பஞ்ஜந ரஞ்ஜனீ
மதுரிபு ஸஹோதரீ தலோதரீ திரிபுர ஸுந்தரீ மஹேஸ்வரீ (கமலாம்பா)


அடியேன் மனத்துள்ளும் கமலாலயம்  என்னும்  திருவாரூரில் கோவில் கொண்டிருப்பவள், தூய உள்ளம் உடைய ஞானியர்களால் ஆராதிக்கப்படுபவள், தாமரை போன்ற திருமுகமுடையவள், சுந்தரேச்வரரின் உள்ளம் கவர்ந்தவள், தாமரைப்பூவினில் அமர்ந்து இருக்கும் லக்ஷ்மி தேவியின் ஆனந்தமான துதிகளினால் ஆனந்திப்பபவள், தரகம் எனப்படும் பிரணவாகாரத்தின் மண்டபத்தில் இருக்கும் கிளி போன்றவள் அந்த மஹிமை பொருந்திய கமலாம்பிகை என்னைக் காத்தருளட்டும்.

மனித உடம்பில் இருக்கும் ஒன்பது சக்ர நிலைகளான திரிபுரா சக்கரம் முதல் ஸர்வாநந்தமய சக்ரம் வரை ஈச்வரியாக இருப்பவள், அணிமாதி போன்ற அஷ்டமாசித்திகளை அருளுபவள், பதினைந்து நித்யா சக்திகளான காமேஸ்வரி நித்யா சக்தி தொடங்கி சித்ரா நித்யா சக்தி வரையுள்ள அனைவருக்கும் ஈஸ்வரியாக விளங்குபவள், த்ரைலோக்ய மோஹன சக்ரத்தில் உள்ள பூபுரம் என்ற சக்ரமாக நிற்பவள். யோகினிகளில் பிரகட யோகினியாக இருப்பவள், தேவர்களுக்கு துன்பம் விளைவிக்கும் தீய சக்திகளான மகிஷாசுரன் முதலான அசுரர்களை வதம் செய்தவள், வேதங்களாலும் புராணங்களால் மட்டும் அறியப்படுபவள், மனம் – புத்தி - ஸித்தி போன்ற மூன்று வகை சக்திகளுக்கு தலைவியாக உள்ளவள், குருகுஹனான கார்த்திகேயனின் தாய், திரிபுர சம்ஹாரத்தால் மனம் மகிழ்ந்தவள், மது என்ற அரக்கனை அழித்த விஷ்ணுவின் சகோதரி, உள்ளங்கை அன்ன வயிற்றினைக் கொண்டவள், திரிபுரமெரித்த விரிந்த சடையுடைய சசிசேகரனின் மனமகிழ் சுந்தரி, மஹேச்வரி இத்தகைய பெருமைகளையுடைய கமலாம்பிகை என்னைக் காத்தருளட்டும்
.


ஸ்ரீ சக்ரத்தின் முதலாவது ஆவரணம் பூபுரம் ஆகும். மூன்று சதுரங்கள் கொண்டது. மூன்று சதுரங்களைக் கொண்டுள்ளதால் த்ரைலோக்யமோகன சக்கரம் ஆகும். இச்சக்கரத்தின் நாயகி திரிபுரா. இதில் அட்டித்து விளங்கும் யோகினி பிரகட யோகினி. அவஸ்தை ஜாக்ரம் ஆகும். இச்சக்கரத்தின் முதல் ரேகையில் அணிமா முதல்  பத்து சித்தி தேவதைகளும், இரண்டாவது ரேகையில் ப்ராஹ்மி முதல் எட்டு  மாத்ரு சக்திகளும், மூன்றாவது ரேகையில் சர்வசம்க்ஷோபனமாய்  திகழும் பத்து முத்ரா தேவதைகளும்  ஆக இருபத்தெட்டு தேவதைகள் மிளிர்கின்றனர். தேகம் ஸ்ரீசக்ரமாக பாவிக்கப்படும் போது முதல் ஆவரணம் ஸ்தூல சரீரத்தையும், இந்திரியங்கள் மனம் முதலியவற்றால் உணரப்படும் விஷயங்களையும் குறிக்கும்.  


                                         முந்தைய பதிவு                                                   அடுத்த பதிவு


                                                                                   அன்னையின் நவராத்திரி  தரிசனம் தொடரும் . . . . . . 

No comments: