Tuesday, August 15, 2017

நவ துவாரகை யாத்திரை -15

கீர்த்தி மந்திர்


இத்தொடரின்  மற்ற  பதிவுகள் :  

  1   2   3   4   5    6    7    8    9    10    11   12    13 

  14   16   17   18   19   20    21   22   23  24    25   26   27   28


புகழ் பெற்ற ஆலயம்

 
அன்பர்கள் அனைவருக்கும் ஜென்மாஷ்டமி  வணக்கம் 

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 

இப்பதிவில் நாம் காண இருப்பது மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த இல்லம்.  காந்தி அவர்களைப் பற்றி குறிப்பிடும் போது மாமேதை ஐன்ஸ்டின் அவர்கள் இவ்வாறு கூறினார். 

“On the occasion of Mahatma Gandhi's 70th birthday. "Generations to come, it may well be, will scarce believe that such a man as this one ever in flesh and blood walked upon this Earth.”― Albert Einstein

வரும் காலத்தில் இப்படியும் ஒரு மனிதர் மனித உடலுடன் இப்பூவுலகில் நடமாடினார் என்று நம்புவது கடினம் சென்று போற்றினார். 


குஜராத் காந்தியடிகள் பிறந்த மண். போர்பந்தர் மது தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்த புண்ணிய ஊர் அல்லவா? எனவே அவரது பிறந்த இடமான கீர்த்தி மந்திர் சென்றோம். கீர்த்தி என்றால் புகழ், மந்திர் என்றால் ஆலயம். ஆகவே அண்ணல் பிறந்த இல்லம் புகழ் பெற்ற ஆலயம் தானே.   மந்திரமான இராம நாமத்தை உச்சரித்துக்கொண்டு, சத்திய வழியில் ந்து, அகிம்சையையே ஆயுதமாகக் கொண்டு அன்னிய தளையிலிருந்து மக்கு விடுதலை வாங்கித் தந்த அண்ணலின் இல்லம் சென்றோம். 1777ம் ஆண்டில் மகாத்மா காந்தியின் முப்பாட்டன்  ஹரிவன்ஜி ராஹ்தாஸ்ஜி  காந்தி அவர்கள்  ந்த இல்லத்தை வாங்கியுள்ளார். 1869ம் ஆண்டு அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இவ்வில்லத்தில் பிறந்தார். அவர் பிறந்த புண்ணிய இடத்தை சுவஸ்திக் சின்னம்  இட்டு  சுட்டிக்காட்டியுள்ளனர். அவரின் வாழ்க்கை வரலாறு பல் வேறு சித்திரங்கள் மற்றும் புகைப்படங்களின் மூலம் முழுவதுமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் சந்தித்த முக்கிய தலைவர்கள், அவரை கௌரவப்படுத்தி மற்ற அரசுகள் வெளியிட்ட தபால் தலைகள் ஆகியவற்றை கண்டு களித்தோம்.




காந்தியடிகள் பிறந்த இடம் 






அண்ணலைச் சிறபிக்க வெளியிடப்பட்ட தபால் தலைகள் 

போர்பந்தர் அக்காலத்தில் எவ்வாறு இருந்ததோ அப்படியேதான் உள்ளது. கோட்டை போன்ற மாளிகைகள்.  பிற்கால சந்ததியினர்  வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து விட்டதால் பராமரிப்பில்லாமல் அப்படியே பூட்டிக்கிடப்பதை பார்த்தோம். குஜராத் மாநிலம் நிலக்கடலைக்கு பெயர் போனது. கடலை பெரிதாக இருக்கும். எனவே ஒரு காலத்தில் மது  தமிழ்நாட்டிலிருந்து கடலை எண்ணெய்  இம்மாநிலத்தில் இருந்தது.  லாரிகள் தேங்காய்களை இங்கு கொண்டு வந்து இங்கிருந்து கடலை எண்ணெய் எடுத்து செல்கின்றன.


அண்ணல் காந்தி - அன்னை கஸ்தூரிபாய் 


 மேலும் அடியேன் தங்கிய ஊரின் அருகே உள்ள  கரமான பரூச்(Bharuch) உப்பு வேர்க்கடலைக்கு பெயர் பெற்றது. அப்போது ஊருக்கு வரும் போது அக்கடலையை வாங்கி கொண்டு வருவேன். அது போன்ற கடலை இங்கும் கிடைத்தது ஆளுக்குக் கொஞ்சம் வாங்கிக்கொண்டோம்.  போர்பந்தரும் கடற்கரை கரமானதால், பாகிஸ்தான் அச்சுறுத்தலுக்காக இந்நகரிலும் கப்பற்படை, மற்றும் கடலோரக் காவல்படை தளங்கள் உள. 


போர்பந்தரில் உள்ள சில கோட்டை போன்ற கட்டிடங்கள் 



போர்பந்தரிலிருந்து சோமநாத் சுமார் 127 கி.மீ தூரம், சுமார் 3 மணி நேரத்தில் சென்று விடலாம் எனவே  இன்றிரவே சோமநாத் அடைந்து விடலாம், ஆலயத்தின் விடுதிகள் உள்ளன, அதிக கட்டணம் வசூலிப்பதில்லை, எல்லா வசதிகளும் உள்ளன எனவே அன்றிரவு அங்கு தங்கிக் கொள்ளலாம்  என்று வண்டி ஓட்டுனர் கூறினார். சோமநாதரின் தரிசனம் கிடைக்குமா? என்று அவரிடம் கேட்டோம் முயற்சி செய்கிறேன், அதிகமான போக்குவரத்து இல்லை என்றால் சென்று விடலாம் என்று கூறினார். அன்றே சோமநாதர் தரிசனம் தந்தாரா? என்று அறிய ஆவலாக உள்ளதா. தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.  

                                                                                 நவ துவாரகை யாத்திரை தொடரும் . . . .

2 comments:

Anuprem said...

மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த இல்லமாம் ..

கீர்த்தி இல்லத்தை நாங்களும் கண்டு மகிழ்ந்தோம்...

S.Muruganandam said...

வாருங்கள் அனு. வருகைக்கு நன்றி. தொடருங்கள்.