Wednesday, May 24, 2017

நவ துவாரகை யாத்திரை -4

டாகோர் துவாரகை -2


 இத்தொடரின்  மற்ற  பதிவுகள்   


  1   2   3   5   6   7   8    9   10   11   12    13 

  14   15   16   17   18   19   20    21   22    23    24    25   26   27   28

                                                     மஹாபிரபுஜீ                   ஸ்ரீநாத்ஜீ                      யமுனாஜீ 




டாகோர் துவாரகை ஸ்ரீகிருஷ்ணர்   ஆலயம் ஒரு கோட்டை போல அமைந்துள்ளது. மிக பிரம்மாண்டமான மதிற்சுவர், நாற்புறமும் வாயில்கள், கோட்டை வாயில்களைப் போலவே உள்ளன.  முக்கிய துவாரத்தின் மேலே நாகர்கானா அமைந்துள்ளது. பூசை சமயத்தில் இசைக் கலைர்கள் மற்றும் மேளகாரர்கள்  இங்கமர்ந்து இசைக் கருவிகளை வாசிப்பார்கள். உள்ளே நுழைந்தவுடன் வெளிப்பிரகாரத்தின் உட்புறத்தில்  இரு புறமும் பிரம்மாண்டமான தீபஸ்தம்பங்கள் இச்சுற்றில் மற்ற அலுவலக அறைகளும் உள்ளன. ஆலயத்தை வலம் வரும் போது துவாரகை கிருஷ்ணரை நிறுத்த துலாபாரத்தைக் காணலாம். தற்போது தங்கக் கவசத்தில் மின்னுகின்றது அத்தராசு.




பொன் துலாபாரம் 

ஒரு சமயம்   ருக்மணிசத்யபாமா ஆகிய  கிருஷ்ணரின்  இரு மனைவியரிடையே அன்பு குறித்து போட்டி எழுந்தது. அப்போது நாரதரின் யோசனைப்படி துலாபாரம் அமைத்து அன்பினை நிரூபிப்பது என்று முடிவானது. துலாபாரத்தில் கிருஷ்ணர் ஒரு தட்டில்  அமர்ந்திருக்க சத்யபாமா கர்வத்துடன் வைர வைடூரியங்கள், பொன் போன்றவற்றை  மறு தட்டில் வைத்தார். தன்னிடமிருந்த அனைத்து விலை உயர்ந்த பொருட்களை கொட்டியும்  கிருஷ்ணரின் துலாபாரத் தட்டு உயரவில்லை. அடுத்தாக ருக்மணி ஒரு பிடி துளசியை அன்பாக வேண்டி வைத்தார். கிருஷ்ணரின் துலாபாரத் தட்டு உயர்ந்துதுளசி இருந்த துலாபாரத் தட்டு கீழே சென்றது. பக்தியின் சிறப்பை விளக்கவும் சத்யபாமாவின் கர்வத்தை அடக்கவும் பகவான் செய்த லீலை அது. இக்கதைதான் தங்க துலாபாரத்தை டாக்கோர் துவாரகையில் தரிசித்த போது அடியேன் மனதில் தோன்றியது.


ங்க சிம்மாசனம்

பிரகாரத்தை வலம் வரும் போது ஸ்ரீகிருஷ்ணருக்கு நிவேதனமான பிரசாதங்களை விற்றுக்கொண்டிருந்தனர். மறு புறத்தில் ஒரு ங்க சிம்மாசனம் இருந்தது. உற்சவ மூர்த்தி எழுந்தருளும் போது இச்சிம்மாசனத்தில் சேவை சாதிப்பார் என்று கூறினார்கள். ஆலய வளாகத்தில் பெரிய மரங்கள் இருந்தன. கோவில் பிரம்மாண்டமாக இருந்தது. எட்டு குவி மாடங்கள் (Dome) மற்றும் 24 நெடிதுயர்ந்த ஸ்தூபிகள். அவற்றின் உச்சியில் உள்ள கலசங்கள்  தங்க கவசத்தில் மின்னுகின்றன.   கருவறை மேல் உள்ள சதுர வடிவமான  ஸ்தூபி 90 அடி உயரமானது. பல்வேறு மிருகங்களின் சுதை வடிவங்கள் கூரையெங்கும்  அமைத்துள்ளனர்.
இக்கோவிலை 1772ம் ஆண்டு புனேவின் பேஷ்வா மாதவ் ராவ் அவர்களின் அதிகாரி கோபால் ஜகந்நாத் தம்ப்வேகர் அவர்கள் இக்கோவிலைக் கட்டினார்.  அவரது கனவில் வந்து ஸ்ரீகிருஷ்ணர் கூறியபடி  பேஷ்வா மற்றும்  பரோடாவின் கைக்வாட் மன்னன் டாமாஜி கைக்வாட் இருவரும் ஒவ்வொரு கிராமத்தை இறையிலியாக அளித்தனர். அதில் டாகோர் கிராமத்தில் தம்ப்வேகர் தற்போதுள்ள இக்கோவிலை   பிரம்மாண்டமாக கட்டினார்.


சதுர விமானம் 
கருவறையும் சபா மண்டமும் உயரமாக அமைந்துள்ளன. வண் துவாராபதி மன்னனை  சேவிக்க   சுமார் 20 படிகள் மேலேறிச் செல்ல வேண்டும். கருவறை மற்றும் சபா மண்டபத்தின் கதவங்களில் வெள்ளிக் கவசம் ஓளிர்கின்றன. அதில் பல கிருஷ்ண லீலை புடைப்பு சிற்பங்கள் எழிலாக அமைக்கப்பட்டுள்ளது. கருவறை மூன்று பகுதிகளாக உள்ளது. வலப்பக்கம் ஸ்நான அறை, டுவில் எம்பெருமான் எழுந்தருளியுள்ளார். இடப்பக்கம் சிகரபந்தி எனப்படும் பள்ளியறை. பள்ளியறையில் வெள்ளி ஊஞ்சல், படுக்கைகள் உள்ளன.  



சபாமண்டபத்தில் இருந்து போரிலிருந்து ஓடிய சுந்தரனை சேவிக்கின்றோம்.  சபா மண்டபத்தின் உள்ளே சரியான கூட்டம். சியாமள வண்ணத்தில் சங்கு சக்கரம் கதை அபய  திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில்  சேவை சாதிக்கின்றார் மனமோகனன். அபய திருக்கரத்தில் தாமரையும் உள்ளது. கிரீடத்தில் கண்ணனுக்கே உரித்தான மயிற்பீலி, பட்டுப் பீதாம்பரம், வனமாலை மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்கள் திருமேனியை அலங்கரிக்க எழிலாக, ஒயிலாக பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றார்.   துவாரகையிலிருந்து வந்த சக்கரவர்த்தி   என்பதால் பொன் சிம்மாசனத்தில் நின்ற கோலத்தில் எழிலாக சேவை சாதிக்கின்றார்.



ரண் சோட் ராய் ஜீ 
கொண்டல் வண்ணன், கரு நீல வண்ணன், அதிருங்கடல் வண்ணன், உருவு கரிய ஒளி மணி வண்ணன், காயா மலர் நிறவன், கருவுடை முகில் வண்ணன், கருவிளை போல் வண்ணன், அஞ்சன வண்ணன், கருமாணிக்கம் என்றெல்லாம் ஆழ்வார்கள் பாடி மகிழந்த வண்ணம், இப்பகுதியில் அனைத்து கிருஷ்ண விக்கிரகங்களும் கருப்பு பளிங்குக் கல்லால் ஆனவை. செவ்வரி ஓடிய பரந்து விரிந்த அழகிய பங்கயக் கண்கள் அப்படியே அனைவரையும் சொக்க வைக்கின்றது  பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குகின்றன. வலக்கரத்தில் புல்லாங்குழல், பட்டு பீதாம்பரம், வரத்ன மாலைகள், மயிற்பீலியுடன் கூடிய மகுடம், திருப்பாதங்களில் கொலுசு என்று பெருமாளை  அருமையாக சேவித்தோம்.   வைத்த கண்ணை எடுக்க முடியவில்லை அப்படியொரு அழகு, ஈர்ப்பு அந்த சௌந்தர்யத்தைப் பருகிக்கொண்டே நின்றோம்.  கருவறை முழுவதும் தங்கத்தால் இழைத்துள்ளனர்.


 வெள்ளித் திருக்கதவம்  
இரு பக்கமும் தொலைக் காட்சி பெட்டிகளிலும் பெருமாளை சேவித்துக் கொள்ளலாம். சில குஜராத்தி  தொலைக் காட்சிகளிலும் ஆலயத்தின்  http://ranchhodraiji.in  வலைத்தளத்திலும்  நேரடி ஒலிபரப்பு செய்கின்றனர்.  சபா மண்டபத்தின் குவிமாடத்தின் உட்பக்கம்  கூரையில் வண்ண வண்ணக் கண்ணாடிகளால் ஆன அருமையான ராஜபுதன பூந்தோட்டக்காட்சிகள்,  எழிலாக  அமைத்துள்ளனர். சபா மண்டபமெங்கும் புள்ளின் வாய் கீண்டல், பேய் முலை உண்ணல், கள்ளச்சகடம் உதைத்தல், கன்று குணிலாய் எறிதல், காளிய ர்த்தனம் ஆகிய பால லீலைகளின் அற்புத ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. அவற்றை எல்லாம் கண்ணுற்ற போது

காயாமலர் நிறவா! கருமுகில்போலுருவா!
கானகமாமடுவில் காளியனுச்சியிலே
தூயடம்பயிலும் சுந்தரவென்சிறுவா!
      துங்கமதக்கரியின் கொம்பு பறித்தவனே!
ஆயமறிந்துபொருவானெதிர்வந்தமல்லை
      அந்தரமின்றியழித்தாடிய தாளினையாய்!
ஆய! எனக்கொருகால் ஆடுக செங்கீரை
      ஆயர்கள்போரேறே! ஆடுக ஆடுகவே (பெரி.தி 1.5.6)
 என்னும் பெரியாழ்வாரின் பாசுரம் மனதில் தோன்றியது.  
பெருமானுக்கு மிக அருகில் பெண்களுக்குக்கென்றே  தனி இடம் ஒதுக்கியிருக்கின்றனர். கிருஷ்ணருக்கு அருகில் சென்று தரிசிக்க உரிமை, அவர்கள் கோபிகைகளாக இருந்ததனாலோ  என்னவோ இக்கோவிலில் வழங்கியுள்ளனர்? கூட்டம் அதிகமாக இருப்பதாலும் பெரிய சபா மண்டபம் என்பதாலும் கோயில் ஊழியர்கள் கயிற்றில் தொங்கிக்கொண்டே  தட்சனை வசூலித்தது புதுமையாக இருந்தது.  


ஸ்ரீநாத்ஜீ

 வல்லபாச்சார்யாரின் புஷ்டி மார்கத்தின்படி வழிபாடுகள் டைபெறுவதால் இசை (ராக்), பிரசாதம் (போக்), உடை மற்றும் அலங்காரம் வஸ்த்ர ஔர் ச்ருங்கார் (வஸ்த்ர ஔர் ச்ருங்கார்) ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படுகின்றது.  கிருஷ்ணனை இவர்கள் சிறு குழந்தையாகவே பாவித்து வணங்குகின்றனர். எப்படி ம் இல்லத்தில் உள்ள சிறு குழந்தைகளுக்கு அலங்காரம் செய்து மகிழ்கின்றோமோ அது போலவே இவர்களும் ஒரு நாளில் பலமுறை பட்டு பீதாம்பரங்கள் மற்றும் விலை உயர்ந்த வரத்ன ஆபரணங்களாலும் பல்வேறு அலங்காரம் செய்து மகிழ்கின்றார். குழந்தைக்கு எப்படி பார்த்து பார்த்து உணவளிக்கின்றோமோ அதே போல ஒரு நாளில் பல முறை பிரசாதம் படைக்கின்றனர். அதுவும் இனிப்புகள் (பால் இனிப்புகள்) பெரிய அளவில்  இவருக்கு  நிவேதனம்   செய்கின்றனர். ஸ்ரீகிருஷ்ணருக்கு அலங்காரம் செய்வதைப் போலவே கருவறை முழுவதும் வண்ணமயமான  துணிமணிகளால் அலங்காரம் செய்கின்றனர். 



காலை 6 மணிக்கு சன்னதி திறக்கின்றனர்.  பன்னிரு மணி வரை சன்னதி திறந்திருக்கின்றது. காலையில் ங்கலா போக், பால் போக் என்று சிருங்கார் போக், க்வால் போக், ராஜ் போக் என்று ஐந்து முறை பிரசாதம் படைக்கின்றனர். அப்போது ஆரத்தியும் காண்பிக்கின்றனர். பின்னர் ஸ்ரீகிருஷ்ணர் சிறிது நேரம்  ஓய்வெடுக்கின்றார். மறுபடியும் மாலை 4:30 மணிக்கு தரிசனம் ஆரம்பம் இரவு 8 மணி வரை தரிசனம் தொடர்கின்றது.  மாலையில் உதாபன் போக், சயன் போக் மற்றும் சக்தி போக் என்று மூன்று முறை பிரசாதம் படைக்கின்றனர். பெருமாளுக்கு பிரசாதம் படைக்க விரும்பும் அன்பர்கள் கட்டணம் செலுத்தி மஹா போக் மற்றும் ராஜ் போக் படைக்கலாம். அடியோங்களுக்கு ஒரு ஆரத்தி சேவிக்கும் பாக்கியம்  கிட்டியது.

அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி
சென்றங்குத்தென்னிலங்கைசெற்றாய்! திறல்போற்றி
பொன்றச்சகடமுதைத்தாய்! புகழ்போற்றி
கன்றுகுணிலாவெறிந்தாய்! கழல்போற்றி
குன்றுகுடையாவெடுத்தாய்! குணம்போற்றி
வென்றுபகைகெடுக்கும் நின்கையில்வேல்போற்றி
என்றென்றுன்சேவகமே ஏத்திப்பறை கொள்வான்
இன்றுயாம்வந்தோம் இரங்கேலோரெம்பாவாய்! (திரு-24)

என்று ஆண்டாள் நாச்சியாரின் பாசுரம் பாடி திவ்யமாக சேவித்தோம். பல பக்தர்கள் தங்களின் கரங்களில் இனிப்புகளை வைத்து ஸ்ரீகிருஷ்ணருக்கு படைக்கின்றனர். “ரண்சோட் ராய் ஜீக்கு ஜே!” என்று கோஷமிட்டு தங்களின் பக்தியை வெளிப்படுத்துகின்றனர்.  இத்தலத்தில் பௌர்ணமி தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை குறிப்பாக ஸ்ரீகிருஷ்ணர் துவாரகையிலிருந்து டாக்கோருக்கு வந்த வராத்திரிக்குப் பின் வரும்  புரட்டாசி பௌர்ணமியும், ஹோலிப் பண்டிகையான பங்குனிப் பௌர்ணமி, சித்திரை, ஆவணி மாதப் பௌர்ணமிகள் மிகவும் சிறப்பாக கொண்டாடப் படுகின்றது. மற்றும் ஜன்மாஷ்டமி, தசரா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. அத்தினங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் இத்தலத்தில் குவிகின்றனராம்.  முகலாயர் காலத்தில் இக்கோவில் சிதைக்கப்பட்டுள்ளது, பின்னர் புனருத்தாரணம் செய்துள்ளனர்.
முதல் துவாரகையின் திவ்யமான தரிசனத்திற்குப் பிறகு வெளியே வந்த போது மஹாலஷ்மித்தாயாரின் திருக்கோயில் அருகில் உள்ள ஒரு சந்தில் இத்தலத்திற்கு ஸ்ரீகிருஷ்ணர் வருவதற்கு காரணமாக இருந்த போதாணா அவர்களின் இல்லத்திற்கு அருகில் உள்ளது. சன்னதி மூடி விடுவார்கள் எனவே விரைவில் சென்று சேவியுங்கள் என்று அங்கிருந்த அன்பர்கள் சிலர் அறிவுறுத்தினர்.  அங்கு சென்று தனிக்கோவில் நாச்சியாராக விளங்கும் தாயாரை சேவித்தோம்.



செல்வத்திருமகளின்  ஆலயம் எளிமையாவும் அமைதியாகவும் உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் வலப்புறம் சிவன் சன்னதி அடுத்து ஆஞ்நேயர் சன்னதி. இவ்வாலயமும் கருவறை மற்றும் சபா மண்டபத்துடன் அமைந்துள்ளது. கருவறையில் அருமையான அலங்காரத்தில் மஹாலக்ஷ்மித்தாயாரை திவ்யமாக சேவித்தோம். வெள்ளிக்கிழமைகளில் ரண்சோட்ராய் உற்சவர்  தாயாரின் சன்னதிக்கு எழுந்தருளி அருள் பாலிக்கின்றாராம்.
பெருமாளுடன் தாயாரையும் சேவித்த மனத்திருப்தியுடன் 200 வருடங்கள் ஸ்ரீகிருஷ்ணர் இருந்த, அருகில் உள்ள போதாணாவின் இல்லத்திற்கு சென்றோம். கிருஷ்ண விக்கிரகம் இருந்த இடத்தில் ஒரு சப்பரத்தில் ஸ்ரீகிருஷ்ணரின் படம். அருகில் ஒரு பளிங்கு மேடையில் திருப்பாதங்கள். வீட்டின் ஒரு புறம் போதாணாவும், கங்காபாயும் சிலை வடிவில் அமைத்துள்ளனர். திவ்ய தம்பதிகளின் தரிசனத்திற்குப்பின் துவாரகைக்கான பயணத்தைத் தொடர்ந்தோம். 

                                                                                 நவ துவாரகை யாத்திரை தொடரும் . . . .

Thursday, May 18, 2017

நவ துவாரகை யாத்திரை -3

டாகோர் துவாரகை -1


 இத்தொடரின்  மற்ற  பதிவுகள் 

    1   2   4   5   6   7   8    9   10   11   12    13   14 

   15   16   17   18   19   20    21    22    23    24     25   26   27   28


ரண் சோட் ராய் ஜீ 

வாருங்கள் நவதுவாரகைகளில் முதலில் அடியோங்கள் தரிசித்த  டாகோர் துவாரகையின் ஸ்ரீகிருஷ்ணருக்கு   ரண் சோட் ராய் ஜீ  என்ற  திருநாமம் எவ்வாறு வந்தது என்பதை காணலாம். ரண் சோட் ராய் என்றால் 'யுத்தத்தைத் துறந்து ஓடிய தலைவன்என்று பொருள். ஒரு வகையில் பார்த்தால் இது போரில் புறமுதுகிட்டு ஓடுவதை குறிக்கும். பொதுவாக குஜராத்தில் இப்பெயரிடுகின்றனர்.
இப்பெயரை கேட்டவுடன்  அடியேனுக்கு எங்கள் அலுவகலத்தில் ந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது. அடியேனுடைய  அதிகாரி ஒருவர் மராத்தியர்,  எனவே அவர் இப்பெயரை கேட்டவுடன் மிகவும் கோபப்பட்டார் யாராவது போரில் தோற்று ஓடினான் என்று பெயர் வைத்துக் கொள்வார்களா? அது கேவலமானது அல்லவா?  என்று வினவினார். அதற்கு குஜராத்தி அன்பர்கள் அது ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா சாதுர்யமாக கால யவனன் என்ற பகைவனை அழிக்க செய்த லீலை என்று விளக்கினார். அதற்கு பிறகு அவர் சமாதானமானார். அடியேன் கேட்ட அக்கதையை தாங்களும் ருசியுங்கள் அன்பர்களே.


ஒரு சமயம்  கார்க்கியன்   ன்பவனை சாலுவன், "போடா பேடி!'' என்று சொல்லி இழிவு படுத்தினான். அதைக் கேட்டதும், அங்கிருந்த யாதவர்கள் பலமாகச் சிரித்து விட்டனர். கார்க்கியனுக்கு அவமானம் தாங்கவில்லை. "என்னைப்  பார்த்துச் சிரித்த இவர்களை விட்டு வைக்கக் கூடாது. இவர்களுக்கு யமனாக, ஒரு குழந்தையைப் பெறத் தவம் செய்வேன்,''  என்று தவத்தில் அவமானப்படுத்திய சாலுவனை விட்டுஅதைப் பார்த்துச் சிரித்தவர்களிடம்  கோபப்பட்டான்.  அதன் பலனாக, பிறந்த போதே யாதவர்கள் மீது பகையோடு பிறந்தான் காலயவனன். கார்க்கியனின் எண்ணமும், அதன் பலனாக அவன் செய்த தவமுமே இதற்குக் காரணம்.
தந்தையின் எண்ணப்படி காலயவனன், யாதவர்களின் அரசனான கண்ணன் மீது பகை கொண்டு வடமதுரையை அழிக்க வந்தான். ஜராசந்தனும் அப்போது பதினேழாவது முறையாக  படையெடுத்து வந்ததால் மதுராவை விடுத்து  கண்ணன்  துவாரகையை நிர்மாணித்து யாதவர்களை அங்கே பத்திரமாகச் சேர்த்தார். அதன்பின், பின்னர் மீண்டும் மதுராவுக்கு வந்து, பலராமருடன் ஆலோசித்து, தாமரை மாலையை அணிந்து, ஆயுதம் ஏதுமின்றி, பட்டணத்தின் வாசலில் இருந்து புறப்பட்டார். நாரதர் மூலம் கண்ணனின் அங்க அடையாளங்களை அறிந்து வைத்திருந்த கால யவனன், அவரைப் பின் தொடர்ந்தான். யோகிகளாலும் நெருங்கமுடியாத பரமபுருஷனைப் பிடிக்க முயன்றான் அவன்!


காலயவனன் கண்ணனை நெருங்கினான். கண்ணனோ, அவனுக்குப் பயந்தோடுவதைப் போல ஓடிப்போய் ஒரு குகைக்குள் மறைந்தார். பின் தொடர்ந்து ஓடிய காலயவனனின் பார்வையில், அங்கே யாரோ படுத்திருப்பது போல தெரிந்தது. படுத்திருப்பவர் கண்ணன் என நினைத்துக் கொண்டு, "ஹா.... அகப்பட்டுக் கொண்டாயா?'' என்றபடி ஓர் அடி அடித்தான். தூங்கிக் கொண்டிருந்தவர் விழித்துப் பார்த்தார். அவர் பார்வையில் பட்ட காலயவனன் எரிந்துபோனான். அவர் முசுகுந்த சக்கரவர்த்தி. இஷ்வாகு வம்சத்தில் வந்த மாந்தாதாவின் மைந்தன்.  தேவர்களுக்கு உதவியதன் காரணமாகக் களைத்து, ஓய்வெடுக்க நினைத்த அவர்,  "என்னை உறக்கத்தில் இருந்து எழுப்புபவன் சாம்பலாகப் போக வேண்டும்,'' என்ற வரம் பெற்றிருந்தவர்  இதை  அறிந்திருந்த மாயக்கண்ணன், காலயவனனை குகைக்கு வரும்படி செய்து, முசுகுந்த சக்கரவர்த்தியின் பார்வையாலேயே அழியும்படி செய்தார். 

இவ்வாறு காலயவனுடன் போரிடாமல் ஓடி தந்திரமாக ஓடி அவனை அழித்தால் ஸ்ரீகிருஷ்ணருக்கு ரண்சோட் ராய் என்ற திருநாமம். ஒரு சாரார் ஜராசந்தனுடன் போர் புரியாமல் மதுராவை விட்டு துவாரகை வந்ததாலும் இப்பெயர் ஸ்ரீகிருஷ்ணருக்கு வழங்குகின்றது என்றும் கூறுவர்.  இப்பெயரில்தான் இந்த டாக்கோர் துவாரகை கிருஷ்ணர் அழைக்கப்படுகிறார்.



நுழைவு வாயில் ( மேலே நாகர் கானா)




அகமதாபாதிலிருந்து கிளம்பியவுடன் வண்டி ஒட்டுர் முதலில் ஓரிடத்தில் கொண்டு வண்டியை நிறுத்தினார். வண்டிக்கு டீசல் போட போயிருப்பார் என்றுதானே தாங்கள் நினைக்கின்றீர்கள் அது தான் இல்லை ஒரு பெட்டிக்கடைக்கு  சென்றார். அங்கு சென்று மாவா என்றழைக்கப்படும் பாக்கு, சுண்ணாம்பு தண்ணீர்  பொட்டலங்களை அள்ளிக் கொண்டார். திரும்பி வரும் வரை வேண்டுமல்லாவா? எப்போதும் வாயில்  போட்டு அதை மென்று கொண்டே இருந்தார். குஜராத்தின் பல இளைர்கள் இப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் கேடா (Kheda) மாவட்டத்தில் இத்தலம் அமைந்துள்ளது. அகமதாபாத் மற்றும் பரோடா ஆகிய இரு கரங்களில் இருந்து சுமார் 90  கி.மீ தூரத்தில் உள்ளது. ஆனந்த் – கோத்ரா புகை வண்டி தடத்தில் உள்ள இத்தலத்தை  பரோடா, தியாத், ஆனந்த் (அமுல் பால் கரம்) ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து மற்றும் புகைவண்டி மூலம் அடையலாம்.  அடியோங்கள்  சுமார் இரண்டு மணி  நேரம்  பரோடா(Baroda) செல்லும் பாதையில் பயணம் செய்து தியாத்(Nadiad) என்ற கரை அடைந்து பின்னர் அங்கிருந்து டாகோரை அடைந்தோம்.  ஒரு சிறிய கிராமம் தான். அதன் மையத்தில் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் எதிரே பீமன் தன் கதையால் உருவாக்கிய  கோமதி குளம் உள்ளது.


டாங்நாத் மஹாதேவர் ஆலயம் 

மஹாபாரத காலத்தில் இப்பகுதி ஹிடும்பவனம் என்னும் அடர்ந்த காடாக இருந்தது. அதில் பல முனிவர்கள் தவமியற்றிக் கொண்டிருந்தனர். அவர்களில் டாங்க முனியும் ஒருவர். அவரின் தவத்திற்கு இரங்கி சிவபெருமான் காட்சி கொடுத்து, முனிவரின் விருப்பத்திற்கிணங்கி அங்கேயே கோவில் கொண்டார் எனவே இத்தலம் முன்காலத்தில் டாங்கோர் என்றழைக்கப்பட்டது. ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையிலிருந்து தன் பக்தன் போதணாவிற்காக இத்தலம் வந்த பிறகு அது டாக்கோர் ஆகியது.
இது என்ன புதுக்கதையாக இருக்கின்றதே என்று பார்க்கின்றீர்களா? வாருங்கள் துவாரகை கிருஷ்ணன் தன் பக்தன் ஒருவருக்காக  டாக்கோர் வந்த கதையைப் பார்க்கலாம். ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணரும் பீமனும் டாங்க முனி தவம் செய்யும் இவ்வனத்திற்கு வந்த போது டாங்கமுனிவர் கிருஷ்ணரிடம் தாங்களும் சிவபெருமானுடன் இத்தலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கவேண்டும் என்று வேண்டினார். ஸ்ரீகிருஷ்ணரும் 4225 வருடங்கள் துவாரகையில் இருந்த பின் இங்கு வருகின்றேன் என்று வரமளித்தார்.


துவாரகை கிருஷ்ணர் டாகோர் வரும் காட்சி 
தான் கொடுத்த வரத்திற்கேற்ப டாக்கோர் வர ஸ்ரீகிருஷ்ணர் தேர்ந்தெடுத்த பக்தர் போதாணா என்ற அந்தணர்.  துவாரகாதீசனிடம் அளவற்ற அன்பு வைத்திருந்த போதாணா, வருடந்தோறும் தன் கையால் வளர்த்த துளசி இலைகளை எடுத்துக் கொண்டு டாக்கோரிலிருந்து  துவாரகைக்குச் சென்று, துவாரகாதீஷனை தரிசிப்பது வழக்கம். தள்ளாத வயதிலும் அவ்வாறு சென்று வந்து கொண்டிருந்தார், அடுத்தடுத்த காலங்களில் தன்னால் துவாரகைக்குச் செல்ல முடியுமோ முடியாதோ? எனும் கலக்கத்துடன் பகவானை வேண்டிக் கொள்வார். அவருக்காக டாக்கோருக்கே செல்லத் தீர்மானித்தார் பகவான்.
ஒரு சமயம் பகவான் போதாணாவிடம் மறு முறை துவாரகை வரும் போது  ஒரு வண்டியுடன் வருமாறு கனவில் பணித்தாராம். போதாணாவும் அவ்வாறே எருதுகள் பூட்டப்பட்ட  வண்டியுடன் துவாரகையை அடைந்தார். துவாரகாவின் பூசாரிகள் எதற்காக வண்டியுடன் வந்திருக்கிறீர்கள் என்று வினவ. பகவான் தன்னுடன் டாக்கோருக்கு வரவிருப்பதாகக் கூறினார். அதை தடுக்க பூசாரிகள் கோவிலை பூட்டி விட்டனர்.  சிறைச்சாலையில் பிறந்தவுடனே  கம்சன் போட்ட காவலை மீறிய கண்ணனுக்கு இக்காவல் எம்மாத்திரம். பூட்டுகள் எல்லாம் உடைந்தன போதாணாவின் வண்டியில் அமர்ந்து கொண்டார், தன்னை டாகோருக்கு அழைத்துச் செல்ல கட்டளையிட்டார்.
வண்டியை ஓட்டிய போதாணா பாதி வழியிலேயே களைப்படைய, பின்பு கண்ணனே வண்டியை ஓட்டிவந்தாராம். அர்ஜுனனுக்காக குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டிய பரந்தாமன், பக்தர் போதாணாவுக்காக மாட்டு வண்டியை ஓட்டினார். அதுதான், இறை அன்பு.
போதாணாவுடன் வந்தபோது, சற்றே இளைப்பாறுவதற்காக பிலேஸ்வர் மஹாதேவ் ஆலயத்திற்கு அருகில் உள்ள ஒரு வேப்பமரக் கிளையில் சாய்ந்து நின்றாராம் கண்ணன். இன்றும், அந்த மரக்கிளையின் இலைகள் மட்டும் இனிப்பாக திகழ்கின்றன!. " லிமடமா மே ஏக் டால் மேதே"  (வேப்ப மரத்தில் ஒரு கிளையில் இனிப்பு)  இந் வேப்ப மரத்தைப் போற்றித் தொழுகின்றனர் பக்தர்கள்.
இதனிடையே, மூலவரைக் காணாமல் துவாரகையே கவலையில் ஆழ்ந்தது. பகவானும் இதையறிந்தார். துவாரகையில் இருந்து தன்னைத் தொடர்ந்து வந்துவிட்ட கோமதி நதியின் கரையில் தன்னை ஒளித்து வைக்கும்படி, போதாணாவைப் பணித்தார். அந்தப் பக்தரோ, 'எங்கே நம் இறைவனைக் கண்டு அழைத்துச் சென்றுவிடுவார்களோஎன்று பதறினார். அப்போது, 'உள்ளவாருள்ளிற்றெல்லாம் உடனிருந்து அறிவனானகண்ணபிரான், தனது சோதிவாய்த் திறந்து போதாணாவிடம் பேசினார். 'தன்னைத் தேடி வருவோரிடம், தனது விக்கிரகத்தின் எடைக்கு எடை பொன் தருவதாகச் சொன்னால், வந்தவர்கள் நகைகளுடன் திரும்பிச் செல்வார்கள்; வருந்தாதே!என்றார் பகவான்.
ஆனால், போதாணாவோ எடைக்கு எடை பொன் தரும் அளவுக்குச் செல்வந்தர் இல்லை! அவரின் மனைவி, கங்காபாய் கடவுளின் கருணையை நன்கு உணர்ந்தவள். தராசின் ஒரு தட்டில் கடவுளின் விக்கிரகத்தையும் மற்றொரு தட்டில் தனது சிறு மூக்குத்தியையும் வைத்தாள். கண்ணனின் மாயத்தினால் ஒரு  ஆச்சர்யம் ந்த்து மூக்குத்தி வைத்த தட்டு, கனமாகிக் கீழிறங்க, கண்ணனின் விக்கிரகம் உள்ள தட்டு மேலே உயர்ந்து நின்றது. வந்தவர்கள் குழம்பியபடி மூக்குத்தியை எடுத்துக்கொண்டு  கிளம்பிச் சென்றனர். பகவான் அசரீரியாக அவர்களுக்கு வேறு ஒரு விக்கிரகம் கிடைக்குமென்று கூறினார்.
டாக்கோர் கோயிலுக்கு அரை கிலோ மீட்டர் முன்னரே வண்டிகளை நிறுத்தி விட்டனர். கூட்டம் அதிகமாகத்தான் இருந்தது. உடைமைகளை சோதனை செய்த பின்னரே கோவிலின் உள்ளே அனுமதிக்கின்றனர். கோவிலின் அருகில் ஒரு கோசாலை உள்ளது. நூற்றுக்கணக்கான  பசு மாடுகள்  கோவிலைச் சுற்றிக்கொண்டிருந்தன.
குஜராத் மாநிலம் “தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்” நிறைந்த மாநிலம். அமுல் என்ற பெயரை அறியாத இந்தியர் இல்லை. அந்த அமுல் பால் பண்ணை,  பாரத தேசத்தின் வெள்ளை புரட்சிக்கு காரணியாக  இருந்த கூட்டுறவு பால் பண்ணை அருகில் உள்ள ஆனந்த் கரில்தான் அமைக்கப்பட்டது.


கோமதிக்குளம்


முதலில் கோமதி குளத்தில் முகம், கை கால் கழுவினோம். இப்பகுதியின் மிகப்பெரிய ஏரி இது. குளத்தில் கிருஷ்ண விக்கிரத்தை போதாணா மறைத்த இடத்தில் ஒரு மண்டபம் அமைத்துள்ளனர். ஒரு மண்டபத்தில் பகவானின் பாதங்கள் அமைத்துள்ளனர். மண்டபம் செல்ல ஒரு பாலமும் உள்ளது. இக்குளக்கரையில்  டாங்கேஸ்வரர் மஹாதேவ் ஆலயமும்  அமைந்துள்ளது.


தீபஸ்தம்பம்
தன் பக்தனுக்காக துவாரகையிலிருந்து  ஓடி வந்த கண்ணனை
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூயப்பெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர்குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரனை  சேவிக்கலாம் வாருங்கள் அன்பர்களே.
                                                  
                                                                                  நவ துவாரகை யாத்திரை தொடரும் . . . .