Monday, March 20, 2017

மாசி மக தீர்த்தவாரி - 5

இத்தொடரின் மற்ற பதிவுகள் :   1   2   3   4  





பழண்டியம்மன்



****************




கற்பக கன்னி அம்மன் 


**************



திருமயிலை மாசி மக தீர்த்தவாரியை திருஞானசம்பந்தர் மாசி கடலாடல் என்று பாடியுள்ளார். இதோ அப்பாடல் 

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
அடலானே றூரு மடிக ளடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்




திருமயிலை கபாலீஸ்வரர்

அதிகாலையிலிருந்தே பக்தர்கள் எப்போது கபாலி வருவார் என்று காத்திருக்கின்றனர். கபாலி ! கபாலி! என்று பக்தர்கள் உருகுவதை நேரில் பார்த்தாலே உணர முடியும்.

***************

கருட வாகன சேவை 

இப்பதிவுடன் இவ்வருடத்திற்கான மாசி மக தீர்த்தவாரி தரிசனம் நிறைவு பெற்றது.  வந்து தரிசனம் பெற்ற அன்பர்கள் அனைவருக்கும் இறைவன் அருள் சித்திக்க வேண்டுகிறேன். 

Sunday, March 19, 2017

மாசி மக தீர்த்தவாரி - 4

இத்தொடரின் மற்ற பதிவுகள் :   1   2   3   5  


                                               





                                       
கால மாற்றத்தினால் இன்றைய கால கட்டத்தில் மேதை நடேசன் சாலை, கிருஷ்ணாம்பேட்டை,திருவல்லிக்கேணிப்  பகுதியில் இருந்தாலும், திரிபுரசுந்தரி உடனுறை  தீர்த்தபாலீஸ்வரர் கோவில் திருமயிலையிலேயே முற்காலத்தில் இருந்தது .

அக்காலத்தில் இக்கோவிலைச்  சுற்றி 64 தீர்த்த குளங்கள் இருந்தனவாம், மிகப்பெரிய தீர்த்தமாக வங்க கடலும் கோவிலுக்கு சற்று தொலைவிலேயே இருப்பதால் தீர்த்தங்களை பாரிபாலனம் செய்யும் ஈஸ்வரர்= தீர்த்தபாலீஸ்வரர் என்று திருநாமம். 

சூரியனை நோக்கி நீர் விடுவதான ”அர்க்கியம்” இங்கு முன் காலத்தில் முனிவர்களாலும் சித்தர்களாலும் செய்யப்பட்டதாக நம்பிக்கை. சிறிய கோவில் தான் ஆனால் மிகவும் பழமையானது அமைந்திருக்கும்சுற்றுபுறத்திற்கு மாறாக கோவிலின் உள்ளே அமைதி தவழ்கிறது. 

திருபுரசுந்தரி அம்மன் பெயருக்கு ஏற்றவாரே அருளும் அழகும் பொங்க காட்சி அளிக்கிறார். நீர் சார்ந்த உணவுகளான பாயசம், பானகம் போன்ற உணவுகளை இறைவனுக்கு படைத்து வழிபட்டு எல்லோருக்கும் பகிர்ந்தால் நலம் பல பெறலாம். 









கண்ணாடி தரிசனம் 

**************


 


அஸ்திர தேவரில் சிவசக்தி 


அபிஷேகம் 


அலங்காரம் 




  கற்பூர ஆரத்தி 


 **************


மல்லீஸ்வரர் 

முற்காலத்தில் மல்லிகை வனமாக இருந்த இடத்தில் அமையப்பெற்றதால் எம்பெருமானுக்கு மல்லீஸ்வரர்  என்று திருநாமம்.  மரகதாம்பிகை சமேதராக அழகிய சிறிய கோவிலில் காட்சியளிக்கிறார் மல்லீஸ்வரர்.

மல்லிகையின் வாசம் போல பக்தர்களின்  மனதில் பரவசம் ஏற்படுத்தும் ஈஸ்வரர். நமதுமனமாகிய மலரை நற்சிந்தனையோடு இறைவன் திருவடியில் சமர்பித்தால் நமக்கு ஏற்படும் நன்மைகள்பல. அது அகவழிபாடு. புறவழிபாடாக மனம் மிகுந்த மலர்களையும் உணவு வகைகளையும் தாமரை இலையில் படைத்து வழிபட்டு பகிர்வது இந்த கோவிலில் சிறப்பு. 







கற்பூர ஆரத்தி 


*******************


அங்காளபரமேஸ்வரி அம்பாள் 



                                                                                                                                 மாசிமக தரிசனம்   தொடரும்  .................




Thursday, March 16, 2017

மாசி மக தீர்த்தவாரி - 3

இத்தொடரின் மற்ற பதிவுகள் :   1   2   4   5  


மாசி மாதம் முழுமதியும் மக நட்சத்திரமும் இணைந்து வரும் நன்னாளில் மாசி கடலாட்டு, தீர்த்த வாரி, தீர்த்தம் கொடுத்தல், மாசி மகம் என்றெல்லாம் அழைக்கப்படும் இத்திருவிழா தமிழகமெங்கும் வெகு விமர்சையாக நடைபெறுகின்றது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை கடற்கரையோரம் அமைந்த திருக்கோவில்களின் அனைத்து உற்சவ மூர்த்திகளும் கடலுக்கு எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளுகின்றனர். ஆற்றங்கரையில் அமைந்த திருக்கோவில்களின் மூர்த்திகள் ஆற்றுக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கின்றனர். மற்றும் பல் வேறு திருக்குளங்கள் முதலான நீர் நிலைகளில் மாசி மக தீர்த்தம் கொடுத்தல் சிறப்பாக நடைபெறுகின்றது. கும்பகோணத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு கொண்டாடப்படும் மஹாமகமும் இந்த மாசிமக விழாதான்.



பொற்கொடி அம்பாள் சமேத காரணீஸ்வரர் 


ஸ்வர்ண லதாம்பிகை என்றழைக்கப்படும் பொற்கொடி அம்மன் உடனுறை காரணீஸ்வரர். காரணம்+ஈஸ்வரர் = காரணீஸ்வரர்.  எல்லாவற்றுக்கும் காரணமான ஈஸ்வரர் என்பது. உலகில் நடக்கும் ஒவ்வோர் செயலுக்கும்  ஓர் காரணம் உண்டல்லவா? அத்தனை காரணத்திற்கும்   இறைவன் தான் காரணம் என்பதை உனர்த்தும் ஈஸ்வரன். குடும்ப உறவுகள் பிணி இன்றி நலமாக வாழ இந்த திருத்தலத்தில் தேங்காய் எண்ணை, நல்லெண்ணை மற்றும் விளக்கெண்ணை ஆகியவற்றை சம அளவில் கலந்து 6,12,18,24 ஆகிய அறு வரிசைவில் ஏற்றி இறைவனை வலம் வந்து வழி படுதல் நலம்.



கண்ணாடி தரிசனம் 

அஸ்திர தேவர் 

சுவாமி கடலாடல் 




********************

முத்து மாரியம்மன் 


 தீர்த்தவாரி அம்மன் பாலாபிஷேகம் 


******************


மலர் மங்கை இலக்குமி, பெருமாளை மணம் புரிய இங்கு இறைவனை நோக்கித் தவம் புரிந்ததால் இத்தலத்திற்கு திருவேட்டகம்என்ற திருநாமம். சுவாமிக்கு திருவேட்டீஸ்வரர்என்ற திருநாமம். லிங்க மூர்த்தியின் முடியின் மேற்புறம் ஒரு பிளவு காணப்படுகிறது.

இத்திருக்கோயிலில் தினமும் நடக்கும் முக்கியமானதொரு பூஜை ஸ்படிக லிங்க பூஜையாகும். இதனுடன் சொர்ணவேல், மஹாமேரு, மஹாகணபதி பூஜை, கோமாதா பூஜையும் சேர்ந்து நடைபெறுகிறது. இதனைக் கண்ணுறுவோர் வாழ்வில் உயர்நிலையையும், ஈசனின் பரிபூர்ண அருளையும் பெறுவர் என்பது நம்பிக்கை.

இத்தலம் திருக்காளத்திக்கு ஒப்பானது என்ற அசரீரி வாக்கிற்கு ஏற்ப, இத்தலத்திலும் காளத்தியில் செய்வது போன்றே ஜாதகத்தில் இராகு கேதுவினால் ஏற்படும் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை உள்ளதால் சிறப்புப் பரிகார பூஜை தினமும் செய்யப்படுகிறது. மகா மண்டபத்தின் மேற்கூரையில் ராகு, கேது, சந்திர, சூரியர்களுடன் புடைப்புச் சிற்பங்களாக உள்ளதே இதற்கு சாட்சி. 




இடப  வாகனத்தில் திருவேட்டீஸ்வரர்  


மாசி மக கடலாட்டு விழா கொண்டாட்டத்திற்காக சில ஐதீகங்கள் உள்ளன அவை என்னவென்று பார்ப்போமா? தில்லை சிற்றம்பலமாம் சிதம்பரத்திற்கு வடகிழக்கே , கிள்ளையில் கடற்கரையில் உள்ளது குய்ய தீர்த்தம். இருளில் வந்த குருவை வருணன் பகைவன் என்று எண்ணி அவர் மீது பாசத்தை விட அதனால் அவர் இறந்தார். வருணனை அக்கொலைக் குற்றம் பற்றியது எனவே ஒரு பிசாசு அவருடைய  காலையும் கையையும் கழுத்துடன் கட்டி கடலில் இட்டது. வருணனும் நீண்ட காலம் அங்கு கிடந்தான். அதானால் பூமியெங்கும் மழை இல்லாமல் போனதால் தேவர்கள் வேண்ட அவ்வாறு கிடந்த வருணனுக்கு விமோசனம் அளிக்க பரம கருணாமூர்த்தி சிவபெருமான் ஒரு மாசி மக நாளில் இத்துறைக்கு எழுந்தருளி அப்பாசக் கட்டு அற்றுப் போகும் படி அருள் புரிந்தார் எனவே இத்துறை "பாசமறுத்ததுறை" என்றும் பெயர் பெற்றது அன்று முதல் மாசி மக நாளன்று அனைத்து தெய்வ மூர்த்தங்களும் கடலுக்கு எழுந்தருளும் கடலாட்டு விழாவும் துவங்கியது.

                                                                                                                            மாசிமக தரிசனம்   தொடரும்  .................

Wednesday, March 15, 2017

மாசி மக தீர்த்தவாரி - 2

இத்தொடரின் மற்ற பதிவுகள் :   1   3   4   5  

கோடீஸ்வர யோகம் மக நட்சத்திரத்திற்கு அதிபதியான கேது பகவான் ஞானத்தையும், மோட்சத்தையும் அருளக்கூடியவர். கோடீஸ்வர யோகத்தையும்  வழங்கக்கூடிய வல்லமை உள்ளவர். மாசி மகத்தில் கேதுவின் நட்சத்திரமான மக நட்சத்திரத்தில் சந்திரன் வருகிறது. அப்போது சிம்ம ராசி நாதன் சூரியன். கும்பராசியில் இருந்து சந்திரனை பார்க்கும் காலம் மாசிமாத மக நட்சத்திரத்துடன் இணைவதே மாசி மகமாக திகழ்கிறது. மோட்சத்தை அருளக்கூடிய கேது பகவான் நட்சத்திரமான மகத்தில் இந்த நாள் அமைகிறது. இதனை கடலாடும் நாள் என்றும் தீர்த்தமாடும் நாள் என்றும் சொல்வார்கள். இந்நாளில் விரதமிருந்து குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பல விதமான தானங்கள் செய்வது விசேஷம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாசி மக விரதத்தை அனுஷ்டித்தால் குழந்தைப்பேறு உண்டாகும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளன. 


புதுப்பேட்டை அரங்கநாத சுவாமி தீர்த்தவாரி 

கருடவாகனத்தில் ரங்கநாத ஸ்வாமி


கடலில் இறங்கும் பெருமாள் 



*****************



மாதவப்பெருமாள் 


சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம் 
**************


அணைக்கரைப்பட்டு
  பட்டாபிஷேக ராமர்  ஆலயம் பெருமாள் 

உபய நாச்சியார்கள் 

சக்கரத்தாழ்வார் 

பதினாறு கரங்களுடன் முன்புறம் சக்கரத்தாழ்வாரும் பின்புறம்   யோக நரசிம்மரும் கூடிய சக்கரத்தாழ்வாரே எழுந்தருளி அருள் பாலித்தார். 

நரசிம்மர் 





மாசி மகம் மகத்துவம் மிக்கது. சிவபெருமானுக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளாக மாசிமகம் திகழ்கிறது. கடலுக்கு அடியில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொண்டு வந்ததும் இந்த மாசி மகத்தன்று தான் என புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்ததும் மாசிமகத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. மாசிமகம் தோஷம் தடைகள் நீக்கும் புனித நாளாகும்.  குழந்தை வேண்டுபவர்கள் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வேண்டிக் கொண்டால்  குழந்தை  பிறப்பதாக ஐதீகம்.


மாசி மகம் என்பது “ஸ்ரீ லலிதா ஜெயந்தி” என்று அழைக்கப்படும் அளவிற்கு சாக்தத்தில் சிறப்பான தினமாகச் சொல்லப்படுகிறது. மாக மாசம் என்று சொல்லப்படும் மாசி மாத பெளர்ணமி தினத்தன்று மாலையில் ஸ்ரீலலிதையின் அவதாரம் நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே எல்லா பெளர்ணமி தினங்களிலும் செய்யப்படும் ஆவரண பூஜைகள் இந்த மாசி மாத பெளர்ணமியன்று மாலை மிகச் சிறப்பாகச் செய்யப்படுகிறது.

இந்த மாசி மாத பெளர்ணமி தினமே ஹோலிப் பண்டிகை என்று வடநாட்டில் கொண்டாடப்படுவதாம். இந்த ஹோலிப் பண்டிகையானது கண்ணுக்குத் தெரியாத ராக்ஷர்களிடத்திருந்து குழந்தைகளைக் காப்பதற்காக என்று பவிஷ்யோத்தர புராணத்தில் கூறப்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது. 

                                                                                                                                                                                                                                                                                                                                                            மாசிமக தரிசனம்   தொடரும்  .................