Saturday, May 14, 2016

திருமயிலை திருக்குடமுழுக்கு -3


 
நர்த்தன விநாயகர் விமான சுதை சிற்பங்கள்


கி.பி 7-ஆம் நூற்றாண்டில் இந்தத் தலம், 'மயிலாப்பில்' 'மயிலாப்பு' என அழைக்கப்பட்டது. கி.பி.9-ஆம் நூற்றாண்டில் திருமயிலை, 'மயிலாபுரி' என்று வழங்கப்பட்டதை, நந்திக் கலம்பகம் தெரிவிக்கிறது. சமணர்கள், இந்தத் தலத்தை பத்மநாதபுரம், வாமநாதபுரம் எனும் பெயர்களால் அழைத்தனர். முதலாம் குலோத்துங்கன் காலத்தில், ஜயங் கொண்டாரால் பாடப் பெற்ற கலிங்கத்துப்பரணி 'பண்டை மயிலை' என்று குறிப்பிடுகிறது. கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த வெனிஸ் வணிகர் மார்கோபோலோ, 'மயில்கள் நிறைந்த பகுதி' என திருமயிலையைக் குறிப்பிடுகிறார்.

சிங்கார வேலவர் சன்னதி

சிங்காரவேலவர் விமானம் 

திருமயிலை உலா, திருமயிலைக் கலம்பகம், திரு மயிலை யமக அந்தாதி, கபாலீசர் பதிகங்கள், திருமயிலைக் கபாலீசர் இரட்டை மணிமாலை, திருமயிலைப் பதிற்றுப் பத்தந்தாதி, திருமயிலாப்பூர் பதிகங்கள், கங்காதர நாவலர் இலக்கியங்கள், ஸ்ரீகபாலீச்சரர் தோத்திரம், சென்னைத் திருமயிலை ஸ்ரீகபாலீச்சரர் துதிப்பா மாலை, கபாலீசர் குறுங்கழி நெடில், திருமயிலை நான்மணிமாலை, பாபநாசம் சிவன் கீர்த்தனைகள், திருமயிலைக் குறவஞ்சி, திருமயிலைக் கபாலீசன் மாலை, திருமயிலை வெண்பா அந்தாதி, திருமயிலை ஸ்ரீகபாலீசுவரர் துதி, ஆகியன ஸ்ரீகபாலீஸ்வரரை போற்றிப் பாடப்பட்ட நூல்கள்.


சிங்காரவேலவர் விமான சுதை சிற்பங்கள்


கற்பகவல்லியம்மை பதிகம்திருமயிலைக் கற்பகவல்லி அஷ்டகம்கற்பகவல்லி மாலைகற்பகவல்லியார் பஞ்சரத்தினம்ஸ்ரீகற்பகாம்பாள் பாடல்கள்கற்பகாம்பிகை அந்தாதிப் பதிகம்திருமயிலாபுரிக் கற்பகாம்பிகை மாலைதிருமயிலைக் கற்பகாம்பிகை பிள்ளைத் தமிழ் ஆகியன ஸ்ரீகற்பகாம்பாள் மீது பாடப்பட்ட இலக்கியங்கள்.

திருமயிலை சிங்காரவேலர் பிள்ளைத் தமிழ்திருமயிலைக் கோவைசிங்கார வேலர் மாலைதிருமயிலைக் குகன் பதிகங்கள்மயிலைச் சண்முகப் பஞ்சரத்தின மாலைஅருட்புகழ்மயிலைச் சிங்காரவேலர்இரட்டை மணிமாலைதிரு மயிலைச் சிங்கார வேலர் பதிகம் ஆகியன மயிலை ஸ்ரீசிங்காரவேலரை போற்றிப் பாடப்பட்டவை.


தவிரதிருமயிலைப் பிள்ளைத் தமிழ்திரு மயிலைக் கோவைதிருமயிலை உவமை வெண்பாதிருமயிலை வெண்பாவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் பதிகங்கள்திருக்குருகூர் ஞானசித்த சுவாமிகளின் பதிகங்கள்தாச்சி அருணாசல முதலியார் பதிகங்கள்கி.ஊ.பா. கங்காதர நாவலரின் நூல்கள் ஆகியனவும் மயிலைவாழ் தெய்வங்களைப் போற்றும் நூல்கள் ஆகும். அதாவது சிவனாரையும் உமையவளையும் முருகக் கடவுளையும் போற்றிக் கொண்டாடியதற்கு ஏராளமான நூல்களே சான்றுகளாகத் திகழும் மிகப் புராதனமான திருத்தலம்மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில்!

1 comment:

ஸ்ரீமலையப்பன் said...

மிக அருமை ... தங்கள் வலைப்பூ கண்டத்தில் மகிழ்ச்சி.. என்னுடைய வலைப்பூ http://ethilumpudhumai.blogspot.in/ நன்றி