Sunday, April 17, 2016

ஆருத்ரா தரிசனம்(2016) - 9

  நவ  நடராஜர்  சந்திப்பு விழா -4




அனைத்து சுவாமிகளும் வந்து சேர்ந்தவுடன். சிவனடியார் சேவா சங்கத்தினர் சுவாமிகளுக்கு பட்டும், பிரசாதமும் சமர்பித்தனர். பட்டு சுவாமிக்கு சார்த்தப்பட்டு , பிரசாதம் நிவேதனம் ஆனபின் ஏக காலத்தில் ஒன்பது நடராஜர்களுக்கும் தீபாராதணை நடந்தது. அன்பர்கள் அனைவரும் ஓம் நமசிவாய என்று ஆனந்த கண்ணீருடன் தரிசனம் கண்டனர். 




ஏக கால தீபாராதனை 



சங்க நாதம் முழங்குகின்றனர் 

திருமுறைகள் ஓதுகின்றனர் 

இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய்
அந்தரமே திரிந்துபோய் அருநகரில் வீழ்வேற்குச்
சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அந்தமிலா ஆனந்தம் அணிகொள் தில்லை கண்டேனே

என்று அன்பர் பாட அனைவரும் சேர்ந்து பாடினர். 

தங்கக் கவசத்தில் அம்பாள்

இப்பதிவுடன் ஆருத்ரா தரிசனம் நிறைவு பெற்றது, அடுத்த பதிவில் மாசி மக காட்சிகளைக் காணலாம் அன்பர்களே. 

No comments: