Thursday, September 17, 2015

விநாயகர் கவசம்

விநாயகர் கவசம்


அன்பர்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்



வளர் சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க
வாய்த்த சென்னி அளவுபடா அதிக சவுந்தர தேக மதோற்கடர்தாம் அமர்ந்து
 காக்க
விளரற நெற்றியை என்றும் விளங்கிய காசிபர் காக்க
புருவந் தம்மைத் தளர்வின் மகோதரர் காக்க


தடவிழிகள் பாலசந்திரனார் காக்க
கவின் வளரும் அதரம் கசமுகர் காக்க
தாலங் கணக்கிரீடர் காக்க
அவில்சிபுகம் கிரிசைசுதர் காக்க



அனி வாக்கை விநாயகர் தான் காக்க
அவர் கை துன்முகர் காக்க
அள்ளெழிற் செங்செவி பாசபாணி காக்க
தவிர்தலுறாதிளங்கொடிபோல் வளர்மணி நாசியைச் சித்திதார்த்தர் காக்க



காமருபூமுகங் தன்னை குணேசர் அனி காக்க
வாமமுறும் இரு தோளும் வயங்கு ந்தபூர்வசர் தாம் மகிழ்ந்து காக்க
ஏமமுறு மணி முலை விக்கினவிநாசன் காக்க
இதயதன்னை தோமகலுங்  கணநாதர் காக்க



வகட்டினைத் துலங் கேரம்பர் காக்க
பக்கமிரண்டையுங் தராதரர் காக்க
பிருடத்தை பாவம் நீக்கும் விக்கினகரன் காக்க
விளங்கிஇலிங்கம் வியாளபூடணர் தாம் காக்க

தக்குய்ய தன்னை வக்கிரதுண்டர் காக்க
சகனத்தை அல்லல் உக்க கணபன் காக்க
ஊருமை  ங்கள மூர்த்தி உவந்து காக்க
தாழ்முழந்தாள் மகாபுத்தி காக்க


இருபதம் ஏகதந்தர் காக்க
வாக்கரங்கி பிரப்பிரசாதனர் காக்க
முன் கையை வணங்குவார் நோய்  ஆழ்தரச்செய் ஆசாபூரகர் காக்க
விரல் பதும அத்தர் காக்க


கேழ்கிளரும் ங்கள் விநாயகர் காக்க
கிழக்கினிற் புத்தீசர் காக்க
அக்கினியில் சித்தீசர் காக்க
உமா புத்திரர் தென்னாசை காக்க


மிக்க நிருதியிற் கணேசுரர் காக்க
விக்கின வர்த்தனர் மேற்கென்னும் திக்கதனில் காக்க
திகழ் உதீசி தக்க நிதிபன் காக்க
வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க 

ஏகதந்தர் பகல் முழுதும் காக்க

இரவினுங்  ந்தி இரண்டன் மாட்டும் ஒகையின் விக்கினகிருது காக்க

இராக்கதர் பூதம் உறு வேதாளம் மோகினிப் பேய் இவையாதி உயிர் திறத்தால் வருதுயரும் முடிவிலாத வேகமுறு  பிணி பலவும் விலக்கு பாசாங்குசர் தாம் விரைந்து காக்க

மதி ஞானம் தவ தானம் மானம் ஒளி புகழ் குலம் வண் சரீர முற்றும் பதிவான தன தானியங்  கிரகம் மனைவி மைந்தர் பயில் ட்பாதிக் கதியாவும் கலந்து சர்வாயுதர் காக்க



காமர் பவுத்திரர் முன்னான விதியாருங்  சுற்றமெலாம் மயூரேசர் 
ஞ்ஞான்றும் விரும்பிக் காக்க
வென்றி சீவிதங்  கபிலர் காக்க
கரியாதி யெலாம் விகடர் காக்க



என்றிவ்வாறிதனை  முக்காலமும் ஓதிடினும் பால் இடையூறொன்னும்
ஒன்றுறா முனிவர்காள் அறிமின்கள் யார் ஒருவர் ஓதினாலும்
மன்றவாங்  கவர் தேகம்  பிணியற வச்சிர தேகம் ஆகி மன்னும்

No comments: