Saturday, July 11, 2015

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 12

கோரக்பூரிலிருந்து போக்ரா பயணம் 


கோரக்கநாதர் ஆலயம் 


கோரக்கர் பதினெட்டு சித்தர்களுள் ஒருவராக கருதப்படுகின்றார். இவரது குரு மச்சேந்திரநாதர் ஆவார்.  ஒரு சமயம்  மச்சேந்திர நாதர் மாயையின் வசப்பட்டு மலையாள தேசத்தின் அரசியை மணந்து கொண்டு  குடும்பமாக இருந்தபோது அவரை மீட்டுக்கொண்து வந்தவர் கோரக்கர். அவருக்கான கோவில் இது.  நேபாளத்திலும் மச்சேந்திரர் மற்றும் கோரக்கர் வழிபாடு உள்ளது.




ஆற்றின் இடையே ஒரு பாலம் 

கோரக்பூரில் இருந்து பேருந்து மூலம் எல்லைப்புற நகரமான சுனௌலியை அடையலாம். நம் இந்திய பேருந்துகள் நேபாளத்திற்குள் செல்ல அனுமதியில்லை எனவே அங்கு இறங்கி நடந்து எல்லையைக் கடந்து அப்புறம் சென்று பேருந்து, ஜீப் மூலம் போக்ராவை அடையலாம். 

                                                  போக்ரா செல்லும் பாதை 



நேபாளத்தில் இவ்வழியில் புத்தர் பிறந்த இடமான லும்பிணி உள்ளது.  கோரக்பூருக்கு அருகில் அவர் பரிநிர்வாணம் அடைந்த குஷி நகரம் உள்ளது.  சிலர் புத்தரின் இந்த நினைவிடங்களையும் சென்று தரிசிகின்றனர்.  கோரக்பூர் போக்ரா இடையிலான தூரம்  சுமார் 215 கி.மீ ஆகும். சுமார் 7   மணி நேரம்  பயணம் செய்த  பின் இவர்கள் போக்ரா அடைந்தனர். .   




No comments: