Saturday, September 27, 2014

நவராத்திரி நாயகி - 4

ஓமந்தூர்  பாலம்பிகை  மூலவர் அலங்காரங்கள்

வனவாசத்தின் போது பீமனுக்கு பசி போக்க பால் வழங்கியவள் என்பதால் அம்மனின் திருநாமம்  "பாலம்பிகை"  (க்ஷீராம்பிகை) பீமன் வழிபட்டதால் ஐயனுக்கு "பீமேசுவரர்"  என்று திருநாமம். இவ்வலங்காரங்கள் சென்ற வருடத்தியவை. 

மதுரை மீனாட்சி அலங்காரம்


காஞ்சி காமாட்சி அலங்காரம் 

வாராகி அலங்காரம்


அன்னபூரணி அலங்காரம்

அன்னபூர்ணே சதாபூர்ணே சங்கர ப்ராண வல்லபே|

ஞான வைராக்ய சித்தியர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி||  

கருமாரி அம்மன் அலங்காரம் 

உமையொரு  பாகர் அலங்காரம்

அம்மையப்பர் போற்றி

தேவார திருவாசங்களில் திரட்டிய போற்றிகள்

ஓம் அணங்கின் மணவாளா போற்றி
ஓம் அம்மையப்பா போற்றி
ஓம் அம்மையே அப்பா ஒப்பிலா மணீயே போற்றி
ஓம் அர்த்தநாரீஸ்வரா போற்றி
ஓம் அரியாடிய கண்ணாள் பங்க போற்றி
ஓம் அரிதரு கண்ணி யாள் ஒரு பாகா போற்றி
ஓம் இமவான் மகட்கு தன்னுடைய கேள்வனே போற்றி
ஓம் இளமுலையாள் உமை பாகா போற்றி
ஒம் இமயமென்னும் குன்றரைக் கண்ணன் குலமகட் பாவை கூற போற்றி
ஓம் உடையாள் உன் தன் நடுவிருக்க உடையாள் நடுவுள் நீயிருத்தி போற்றி
ஓம் உண்ணாமுலை உமையாளுடனாகிய ஒருவன் போற்றி
ஓம் உமையாள் கணவா  போற்றி
ஓம் உமையவள் பங்கா போற்றி
ஓம் உமை நங்கையோர் பங்குடையாய் போற்றி
ஓம் ஏலம் ஏலும் நற்குழலி பங்கனே போற்றி
ஓம் ஏலவார் குழலி நாயக்னே போற்றி
ஓம் ஏலவார் குழல் உமை நங்கை ஏத்தி வழிபட்ட காலகாலனே போற்றி
ஓம் கயல்மாண்ட கண்ணி தன் பங்க போற்றி
ஓம் காவி சேரும் கயல் கண்ணாள் பங்கா போற்றி
ஓம் கிளி வந்த மென்மொழியாள் கேழ் கிளரும் பாதியனே போற்றி
ஓம் குரவங்கமழ் நறுமென் குழல் உமை பங்க போற்றி
ஓம் கொடி ஏர் இடையாள் கூறா எம் கோவே போற்றி
ஓம் கொம்பர் ஆர் மருங்குல் மங்கை கூற வெண்ணீற போற்றி
ஓம் கொத்தலர் குழலி பாக போற்றி
ஓம் கொம்மை வரிமுலை கொம்பு அணிஅயாள் கூற போற்றி
ஓம் கோல் வளையாள் பாகா போற்றி
ஓம் கோங்கு அலர் சேர் குவி முலையாள் கூற போற்றி
ஓம் கோலப் பொங்கு அரா அல்குல் செவ்வாய் வெண்ணகைக் கரியவாள்கண்
       மங்கையோர் பங்க போற்றி
ஓம் கோல் வளையாள் பங்க போற்றி
ஓம் சிறு மருங்குல் மை ஆர் தடங்கண் மடந்தை மணவாளா போற்றி
ஓம் சுரிகுழல பணை முலை மடந்தை பாதியே போற்றி
ஓம் செப்பு ஆர் முலை பங்கனே போற்றி
ஓம் செப்பிள முலை நன் மங்கை யொரு பாக போற்றி
ஓம் செந்துவர் வாயுமை பங்க போற்றி
ஓம் தளரா முலை முறுவல்லுமை தலைவா போற்றி
ஓம் திதலைச்செய் பூண்முலை மங்கை பங்க போற்றி
ஓம் துடி கொள் நேர் இடையாள் சுரி குழல் மடந்தை பங்கனே போற்றி
ஓம் தையல் ஒர் பங்கினர் போற்றி
ஓம் தையல் ஒர் பாகம் வாழ் ஜகந்நாதனே போற்றி
ஓம் தையல் இடம் கொண்ட பிரான் போற்றி
ஓம் தோடுடைய சிவியா போற்றி
ஓம் மதி நுதல் மங்கை பங்க போற்றி
ஓம் மலைக்கு மருகனே போற்றி
ஓம் மலையான் மருகனாய் நின்றாய் போற்றி
ஓம் மலை மாது ஒரு பாகா போற்றி
ஓம் மலையரையன் பொன் பாவை வாள் நுதலாள் பெண் திரு நாயக போற்றி
ஓம் மலை மகளை ஒரு பாகம் வைத்தானே போற்றி
ஓம் மரு ஆர் மலர்க்குழல் மாது பங்க போற்றி
ஓம் மட்டுவார் குழல் மங்கையாளை ஓர் பாகம் வைத்த அழகா போற்றி
ஓம் மாவடு வகிர் அன்ன  கண்ணி பங்க போற்றி
ஓம் மாது இருக்கும் பாதியனே போற்றி
ஓம் மாது நல்லாள் உமை மங்கை பங்கன் போற்றி
ஓம் மாது ஒரு கூறு உடைய பிரான் தன் கழலே போற்றி
ஓம் மாதினுக்கு உடம்பிடம் கொடுத்தானே போற்றி
ஓம் மைத்தடங்கண் வெருள்புரி மான் அன்ன நோக்கி தன் பங்க போற்றி
ஓம் மையார் ஒண் கண் நல்லாள் உமையாள் வளர் மார்பினனே போற்றி
ஓம் பஞ்சேர் அடியாள் பங்க போற்றி
ஓம் பஞ்சு ஏர் அடியாள் பாகத்து ஒருவா போற்றி
ஓம் பஞ்சின் மெல்லடியாள் பங்க போற்றி
ஓம் பந்து அணை விரலி(விரலாள்) பங்க போற்றி
ஓம் பருவரை மங்கை  தன் பங்க போற்றி
ஓம் பணைமுலைப் பாக போற்றி
ஓம் பண் தனை வென்ற இன்சொற் பாவையோர் பங்க போற்றி
ஓம் பண்ணின் நேர் மொழியாள் பங்க போற்றி
ஓம் பண் ஆர்ந்த மொழி மங்கை பங்க போற்றி
ஓம் பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி
ஓம் பாடக மெல் அடி ஆர்க்கும் மங்கை பங்க போற்றி
ஓம் பாதி மாதொடும் கூடிய பரம்பரனே போற்றி
ஓம் பழுது இல் தொல் புகழாள் பங்க போற்றி
ஓம் புன வேய் அனவளை தோளி பங்க போற்றி
ஓம் பூண் முலையாள் பங்க போற்றி
ஓம் பெண் சுமந்த பாகத்தா போற்றி
ஓம் பெண் ஆளும் பாகனே போற்றி
ஓம் பெண் பால் உகந்த பெரும் பித்தா போற்றி
ஓம் பெண்ணை தென் பால் வைத்தாய் போற்றி
ஓம் பெண்ணின் நல்லாள் பங்க போற்றி
ஓம் பெண்ணோர் பாகா போற்றி
ஓம் பெண்ணாகிய பெருமான் போற்றி
ஓம் பெந்நாப்பட அரவு ஏர் அல்குல் உமை பாகா போற்றி
ஓம் போகமார்த்த பூண் முலையாள் பாகா போற்றி
ஓம் போரில் பொலியும் வெள்கண்ணாள் பங்க போற்றி
ஓம் மாதொரு பாகனே போற்றி
ஓம் மாது இயலும் பாதியனே போற்றி
ஓம் மாது ஆடும் பாகத்தா போற்றி
ஓம் மஞ்சாடும் ,மங்கை மணாளா போற்றி
ஓம் மான் ஓர் பங்கா போற்றி
ஓம் மானேர் நோக்கி மணாளா போற்றி
ஓம் மான் நேர் நோக்கி  உமையாள் பங்க போற்றி
ஓம் மான் பழித்து ஆண்ட மெல் நோக்கி மணாளா போற்றீ
ஓம் மலையாள் மணவாளா போற்றி
ஓம் மை இலங்கு நல்கண்ணி பங்கனே போற்றி
ஓம் நங்கடம்பனை பெற்றவள் பங்க போற்றி
ஓம் நாரி பாகனே போற்றி
ஓம் வரை ஆடு மங்கை தன் பங்க போற்றி
ஓம் வார் உறு பூண் முலையாள் பங்க போற்றி
ஓம் வார்கொண்ட வன முலையாள் உமை பங்க போற்றி
ஓம் வெண்ணகை கருங்கண்  திரைசேர் மடந்தை மணந்த திருப்பொற் புயங்க போற்றி
ஓம் வேயுறு தோளி பங்க போற்றி


கலை மகள் அலங்காரம் 

பிரத்தியங்கிரா தேவி அலங்காரம் 

புகைப்படங்கள்  அடியேனது நண்பர் சுந்தர் அவர்களுடையது. அவருடைய அருமையான புகைப்படங்களை இங்கு காணலாம் சுந்தரின் புகைப்படங்கள்

                                                 அபிராமி அம்மை பதிகம்

நீடுலகங்களுக்கு ஆதாரமாய் நின்று 
நித்தமும் மூர்த்தி வடிவாய்

நியமமுடன் முப்பத்திரண்டு அறம் வளர்க்கின்ற
 நீ மனைவியாய் இருந்தும்

வீடு வீடுகள் தோறும் ஓடிப்புகுந்து கால்
வேஸற்று இலச்சையும் போய்

வெண்துகில் அரைக்கணிய விதியற்று நிர்வாண
வேடமும் கொண்டு கைக்கோர்

ஓடு ஏந்தி நாடெங்கும் உள்ளம் தளர்ந்து நின்று
உன்மத்தன் ஆகி அம்மா

உன் கணவன் எங்கெங்கும் ஐயம் புகுந்து ஏங்கி
உழல்கின்றது ஏது சொல்லாய்?

ஆடு கொடி மாடமிசை மாதர் விளையாடி வரும்
                                                       ஆதி கடவூரின் வாழ்வே!
 
                              அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
                                                  அருள்வாமி! அபிராமியே!   (7)



பொருள்: அன்னை அபிராமியே அனைத்து  உலங்களுக்கும் ஆதாரமாக இருப்பவள்.  அவளே பல ஸ்தலங்களில் பல் வேறு வடிவங்களில் அன்பர்களுக்கு  அருள் புரிகின்றாள். சிவபெருமான் அளித்த இரு நாழி நெல்லைக் கொண்டு முப்பதிரண்டு அறங்களையும்  முறையாக செய்த தர்ம ஸம்வர்த்தினியும் அவளே . இவ்வளவு  சிறப்புக்களையும்   நீ பெற்ற  இருந்தும் உன் கணவனாகிய சிவபெருமான், வீடு தோறும் சென்று,  கால் நோக  வெட்கத்தையும் விட்டு, இதையில் அணிய ஆடையும் இல்லாமல் திகம்பரராக  கையில் ஓடு ஏந்தி மனம் தளர்ந்து பித்தனாகி பிச்சைக் கேட்டு அலைவது ஏன்? என்று கொடிகள் ஆடி அசைகின்ற மாடங்களில் பெண்கள் விளையாடுகின்ற பெருமை வாய்ந்த திருக்கடவூரின் வாழ்வை ! அமிர்த கடேஸ்வரரின் இடப்பாகம் அகலாத அன்னையை ! கிளியை திருக்கரத்தில் ஏந்தியவளை! அனைவருக்கும் அருள்புரிபவளை! அபிராமி அன்னையை உரிமையுடன் வினவுகின்றார் அபிராமி பட்டர். 

                                                                                                                                                                                    அம்மன் அருள் தொடரும். . . . .. ... 

3 comments:

கோமதி அரசு said...

ஓம்ந்தூர் பாலாம்பிகை மூலவர் அலங்காரங்கள், அம்மையப்பர் போற்றி, அபிராமி அம்மை பதிகம் எல்லாம் அருமை.
நவராத்திரியில் இன்று பாட போற்றியை எடுத்துக் கொள்கிறேன்.
நன்றி. வாழ்த்துக்கள்.

S.Muruganandam said...

நிச்சயம் போற்றி கூறி அம்மையப்பரை வழிபடுங்கள்.

S.Muruganandam said...

நிச்சயம் போற்றி கூறி அம்மையப்பரை வழிபடுங்கள்.