Tuesday, June 17, 2014

மாசி கடலாட்டு திருவிழா - 2

மாசி மாதம் முழுமதியும் மக நட்சத்திரமும் இணைந்து வரும் நன்னாளில் மாசி கடலாட்டு, தீர்த்த வாரி, தீர்த்தம் கொடுத்தல், மாசி மகம் என்றெல்லாம் அழைக்கப்படும் இத்திருவிழா தமிழகமெங்கும் வெகு விமர்சையாக நடைபெறுகின்றது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை கடற்கரையோரம் அமைந்த திருக்கோவில்களின் அனைத்து உற்சவ மூர்த்திகளும் கடலுக்கு எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளுகின்றனர். ஆற்றங்கரையில் அமைந்த திருக்கோவில்களின் மூர்த்திகள் ஆற்றுக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கின்றனர். மற்றும் பல் வேறு திருக்குளங்கள் முதலான நீர் நிலைகளில் மாசி மக தீர்த்தம் கொடுத்தல் சிறப்பாக நடைபெறுகின்றது. கும்பகோணத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு கொண்டாடப்படும் மஹாமகமும் இந்த மாசிமக விழாதான்.


திருமயிலை திருவட்டீஸ்வரர்
 வெள்ளி ரிஷப வாகனத்தில்


* * * * * * * * * *


திருமயிலை மல்லீஸ்வரர்


                                        * * * * * * * * * *



திருமயிலை வீரபத்திரர்

தக்ஷன்


                                          * * * * * * * * * *


சிந்தாதிரிப்பேட்டை முத்துக்குமரன்


முத்துக்குமரன் திருத்தேரில் 




                                        * * * * * * * * * *


அங்காளபரமேஸ்வரி அம்மன் 
                                    
                                         * * * * * * * * * *     


* * * * * * * * * *





* * * * * * * * * *






கொள்ளாபுரி அம்மன் சூரிய பிரபையில்


அம்மனின் பின்னழகு 


ஸ்நான மூர்த்தி அம்மன்

* * * * * * * * * *



திருமயிலை ஏகாம்பரேஸ்வரர்




                                                                                                                   மாசிக் கடலாட்டு தொடரும் >>>>>>> 



Wednesday, June 11, 2014

மாசி கடலாட்டு திருவிழா - 1

இந்த வருடம் சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற மாசி மக தீர்த்தவாரியில் கலந்து கொண்ட சுவாமிகளின் தொகுப்பு இப்பதிவு. 


முதலில் நாம் காண்பது திருமயிலை கபாலீஸ்வரரின்    தீர்த்தவாரி.


கடற்கரைக்கு  கடலாட்டு காண வரும் கபாலீஸ்வரர்





இந்த வரும் சைவ தெய்வ திருமூர்த்தங்களும், வைணவ திருமூர்த்தகளும் ஒரே இடத்தில் கடலாட்டு கண்டருளினர்.


பஞ்ச பர்வ உற்சவம் கண்டருளும் சந்திரசேகர சுவாமியாக  மாசி பௌர்ணமியன்று கபாலீஸ்வரர் கடற்கரைக்கு எழுந்தருளினார்.

கடல் வாழ் உயிரினங்களுக்கும் 
அருள் பாலிக்கின்றார் கபாலீஸ்வரர் 



அஸ்திர தேவர்

அஸ்திர தேவர் கடலாடி தீர்த்தம் தருகின்றார். 

அப்போது உடன் கடலாடும் பக்தர்கள்

கடலாடிய பின்


கடற்கரையில் பல்வேறு
 திரவியங்களால்   அபிஷேகம்


பின்னர் நைவேத்யமாக வெள்ளரிக்காய் படைக்கப்படுகின்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கிய பின்  கபாலீஸ்வரர் திருக்கோவிலுக்கு எழுந்தருளுகின்றார்.

மாசி மக தீர்த்தவாரி பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லுங்கள்


அம்மையின் ஞானப்பலுண்ட ஆளுடையப்பிள்ளை திருஞான சம்பந்தர் திருமயிலையின்  மாசி கடலாட்டைப் பற்றி பாடிய பதிகம் 

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
அடலானே றூரு மடிக ளடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்


கபாலீச்சரம் அமர்ந்தான் கடலாட்டு 
காணும் அற்புத காட்சி

பொருள்: பூம்பாவாய்! மடல்கள் நிறைந்த தென்னை மரங்கள் நிறைந்த மயிலாப்பூரில் மாசி மக நாளில் கடலாட்டுக் கண்ட களிப்பொடு கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும், வலிமை பொருந்திய ஆனேற்றில் ஊர்ந்து வருபவனும் ஆகிய இறைவன் புகழ் பரவி அப்பெருமானது நடனமாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ? என்று அம்மையின் ஞானப்பாலுண்ட ஆளுடையப்பிள்ளையாம் திருஞானசம்பந்தர் திருமயிலையில் எலும்பை பெண்ணாக்கிய அற்புதம் செய்த போது பாடிய இப்பதிகத்தில் கபாலீஸ்வரப் பெருமானின் பல்வேறு திருவிழாக்களில் மாசி கடலாட்டு விழாவை காணாமல் போகலாமா? என்று வினவுகிறார். 

மாசிக் கடலாட்டு தொடரும் >>>>>>>