Sunday, November 3, 2013

முத்தான முத்துக் குமரன் கும்பாபிஷேகம் -5


தங்க குதிரை வாகனம்

கால்கள் கீழே பதியாமல் குதிரை பாய்ந்து வருவது போல அருமையாக அமைத்துள்ளனர். உலா வரும் போது குதிரை ஆடும் போது அப்படியே குதிரை ஓடி வருவது போல தோன்றுகின்றது. அற்புதமான அமைப்பு .


தங்கக் குதிரை வாகனத்தில் சண்டிகேஸ்வரர்



பொய்க்கால் குதிரை ஆட்டக்காரர்கள்

நாதஸ்வரம் ,  கேரளாலிருந்து செண்டை மேளம்  , ஆந்திராவிலிருந்து ட்ரம்கள், கர்நாடகாவிலிருந்து யக்ஷ கான குழுவினர், பேண்ட் குழுவினர் என்று பல் வித கலைக் குழுவினர் இவ்வூர்வலத்தில் கலந்து கொண்டனர். 

வீரபாகு  , அம்மையப்பர்

உடன் விநாயகப் பெருமான்

தாயார்கள், முத்துகுமார சுவாமி பால சுப்பிரமணியர் சண்டிகேஸ்வரர்


 அனைத்து  மூர்த்திகளும்   ஒரே வரிசையில் தரிசனம்  தருகின்றனர்


அனைத்து மூர்திகளுக்கும் ஏக காலத்தில் தீபாரதனை

ஏக காலத்தில் அனைத்து மூர்த்திகளுக்கும் தீபாரதனை நடைபெற்ற போது வானத்தில் அற்புதமாக வாண வேடிக்கை நடைபெற்றது. அன்று நாளை நடைபெற்ற இந்த  அற்புத உற்சவத்தை முழுமையாக படங்களில் கொண்டுவருவது என்பது மிகவும் கடினம் முடிந்தவரை முயற்சி செய்துள்ளேன்.  இது வரை வந்து தரிசனம் செய்த அனைவருக்கும் மிக்க நன்றி.

இன்று முதல் கந்தர் சஷ்டி விரதம் துவங்குகின்றது. 
கந்தன் அருள் அனைவருக்கும் கிட்ட அவர் தாள் இறைஞ்சுகின்றேன். 
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

No comments: