Saturday, March 16, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -15

எட்டாம் திருநாள் காலை
பால சுப்பிரமணியர் பரிவேட்டை உற்சவம்

பால சுப்பிரமணிய சுவாமி

எட்டாம் திருநாள் காலை பால சுப்பிரமணிய சுவாமிக்கு உற்சவம். குதிரை வாகனத்தில் எழுந்தருளி துஷ்டர்களை அழிக்கும் பரி வேட்டை உற்சவம் கண்டருளுகிறார் பால சுப்பிரமணிய சுவாமி.   இக்கோவிலில் உற்சவராக  சிவசுப்பிரமணிய சுவாமி, சண்முகர், பால சுப்பிரமணிய சுவாமி, பழனி ஆண்டவர் மற்றும் சிறிய நித்யோஸ்தவர் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.

பால சுப்பிரமணிய சுவாமி பரிவேட்டை உத்ஸவம் 

எட்டாம் திருநாள் மாலை
அருணகிரிநாதருக்கு பொருள் பாலிப்பு உற்சவம் 

மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில்
 தேவியருடன் சிவசுப்பிரமணிய சுவாமி


எட்டாம் திருநாள் இரவு முருகன் அருணகிரி நாதரை காப்பாற்றி திருப்புகழ் பாட வைத்த உற்சவம் , அருணகிரி நாதருக்கு பொருள் பாலிப்பு உற்சவமாக சிறப்பாக நடைபெறுகின்றது. இன்று மட்டும் சிவ சுப்பிரமணிய சுவாமியும் அருணகிரி நாதரும் கிழக்கு வாசல் வழியாக திருக்கோவிலை விட்டு வெளியே வருகின்றனர் என்பது இந்த உற்சவத்தின் சிறப்பு. பின்னர் மின் அலங்கார புஷ்ப பல்லக்கில் வீதி உலா வந்து அருளுகின்றார் முருகர். 

எழில் கொஞ்சும் குமரன்

பால சுப்பிரமணியர் 


அருணகிரிநாதர்

புஷ்ப பல்லக்கு


மின் அலங்கார புஷ்ப பல்லக்கில் சுப்பிரமணிய சுவாமி 

இன்றும் முழுவதும் ம்லர்களால் ஆன மயில் அலங்காரத்தை கவனியுங்கள் அன்பர்களே.


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கண்கொள்ளாக் காட்சி...

S.Muruganandam said...

முதல் முதலாக பின்னூட்டம் இடுவதற்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்