Thursday, February 28, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -13

ஏழாம் திருநாள் திருத்தேரோட்டம் -1

வீரபாகு தேவர் 

           
                                            தேரில் .வீரபாகுத்தேவர் முன்னே வர பின்னே முருகர் வருகின்றார். 

 தொண்டை மண்டலத்தில் ஏழாம் நாள் திருத்தேரோட்டம். ஐயன் புரியும் ஐந்தொழில்களில் தேரோட்டம் அழித்தல் தொழிலை குறிக்கின்றது. துஷ்டர்களை அழித்து நல்லவர்களை காப்பதைக் குறிக்கின்றது.  



முருகன் திருத்தேர்

தேரின் மலர் அலங்காரம் 




ஆணவம் கன்மம் மாயை என்னும் தாராகாசுரன், சிங்கமுகா சூரன், சூரபத்மன் ஆகியோரை சம்ஹாரம் செய்ய ஞான வேல் கொண்டு  தேரில் செல்லும் வெற்றி வடிவேலன். 

தேரின் அமைப்பு







திருத்தேர்  ஆடி அசைந்து வரும் அழகு




தேரின் பின்னழகு





அழகு முருகனின் தேரோட்டம் சிறிது இடைவெளிக்குப் பின்னர் தொடரும்...

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -12

ஆறாம் திருநாள் உற்சவம் 

 காலை உற்சவத்திற்குஎழுந்தருளும் பெருமான் 


ஆறாம் திருநாள் காலை பச்சை மயில் வாகனத்திலும் இரவு யாணை வாகனத்திலும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் சிவ சுப்பிரமணிய சுவாமி.  

காலை பச்சை மயில் வாகன சேவை 


  தெய்வ நாயகி 




 அகில புவன சக்கரவர்த்தியாக வெள்ளை யானையாம் ஐராவதத்தில் எழுந்தருளுகின்றார் முருகப்பெருமான். தன் மகள் தெய்வ நாயகிக்கு  ஐராவதத்தை அனுப்புகிறான் இந்திரன் எனவே   மயில், ஆட்டுக்கிடாவுடன்  யாணையும் முருகனுக்குரிய வாகனம் ஆகும். இவ்வாலயத்தில் சிவசுப்பிரமணிய சுவாமி மற்றும் சண்முகருக்கு முன் யாணைதான் வாகனமாக பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. 


சுவாமி கையில் வேலை பிடித்திருக்கும் அழகைப் காணுங்கள், அதுவே அங்குசம் ஆக தெரிகின்றதா? தேவியர் இருவர் காலை மடித்து ஒயிலாக அமர்ந்திருக்கும் அந்த அழகையும் படத்தை பெரிது படுத்தி காணுங்கள் அன்பர்களே. 



 மாலை யாணை வாகன சேவை







Wednesday, February 27, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -11

ஐந்தாம் திருநாள் வெள்ளி மயில் வாகன சேவை
( திருவீதி உலா - 2)


சிவ சுப்பிரமணிய சுவாமி



பச்சை மயில் வாகனத்தில் தெய்வ நாயகி





பச்சை மயில் வாகனத்தில் வள்ளி நாயகி




இந்த வருட பின் பக்க அலங்காரம் மயில் முருகன். இதுவும் முழுதும் பூக்களினால் செய்யப்பட்டது.



  சிவசுப்பிரமணிய சுவாமியின்  அருட் கோலங்கள்   தொடரும்.....

Tuesday, February 26, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -10

ஐந்தாம் திருநாள் வெள்ளி மயில் வாகன சேவை
( திருவீதி உலா - 1)

தனி யாணை சகோதரனின் எழிற் கோலம்

மூஷிக வாகனத்தில் மூத்தவன் கணேசன்

அருமை குமரனுடன் அம்மையப்பர் 


இடப வாகனத்தில் பிரதோஷ நாயகர்


வெள்ளி மயில் வாகனத்தில் சிவ சுப்பிரமணிய சுவாமி 


முருகப்பெருமான்

ஓம் என்னும் தாரக மந்திரம் சிவனுக்கு மொழிந்த குரு மூர்த்தி

அகத்தியருக்கு அருள் ஞானம் அளித்த ஞான தேசிகன்

முருகன் , குமரன், ஆறுமுகன், திருமால் மருகன்

சிவகுமாரன், ஸ்கந்தன், மலைமகள் பார்வதி பாலன்  

ஒளி பொருந்திய ஞான சக்தி வேலை  ஏந்தியவன்

கார்த்திகேயன், கஜ முகனுக்கு இளையவன்

குகன், மயில் ஏறும் பெருமாள்

சூரனை சம்ஹாரம் செய்த கருணை  வள்ளல்

சுப்பிரமணியன், தேவ சேனாதிபதி

கடம்ப மாலை அணிந்த கதிர்வேலன்

இச்சா சக்தி வள்ளி, கிரியா சக்தி தெய்வாணை மணவாளன்

செவ்வேள், காங்கேயன், சிலம்பன்

ஆயிரம் பெயர் கொண்ட  அழகன்

தூயவன் சேவற் கொடியோன்

ஆறு திருப்பதி கண்டு ஆறெழுத்தும் கூறுபவர் சிந்தை குடிகொண்டோன்

அழகன் முருகனை துதி செய்தால் நீங்களும் மலம் ஒழித்து மெய்ஞ்ஞான அருள் பெறலாம் 


ஓம் என்னும் பிரணவப் பொருளோன்

தந்தைக்கு உபதேசம் செய்த சுவாமிநாத சுவாமி  அந்த பிரணவ வடிவில் ( ஓம் என்னும் மலர் அலங்காரத்தை கவனியுங்கள்)  அன்பர்களால் 2003ம் ஆண்டில் அர்ப்பணிக்கப்பட்ட வெள்ளி மயில் வாகனத்தில் ஆனந்தமாக எழுந்தருளி திருவீதி உலா வந்து அன்பர்க்கு அருளும் அழகைக் காணக் கண்கோடி வேண்டும். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று அன்பர்களாகிய தங்களுடன் இதை பகிர்ந்து கொள்கிறேன். தரிசனம் செய்து கந்தன் கருணைக்கு பாத்திரமாகும் படி வேண்டிக்கொள்கிறேன்.    

பச்சை மயில் வாகனத்தில் தெய்வ நாயகி



 பச்சை  மயில் வாகனத்தில் வள்ளி நாயகி



பின்புற அலங்காரம்


முழுவதும் மலர்களாலேயே உருவாக்கப்பட்ட இந்த பலகை வெள்ளி மயில் வாகன சேவையின் போது பின் பக்க அலங்காரத்திற்கு பயன் படுத்தப் படுகின்றது.  இந்த வருடம் " யாம் இருக்க பயம் ஏன் என்று " கூறும் அபயக் கோலம். 

                                                                                                                     ஐந்தாம் திருநாள் அருட் கோலங்கள் தொடரும்.....

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -9

ஐந்தாம் திருநாள் வெள்ளி மயில் வாகன சேவை
(மண்டப அலங்காரம்)

ஐந்தாம் திருநாள் காலை சிவிகை உற்சவம் 


அழகு முருகனின் அருட் கோலங்கள்  அதிகமாக உள்ளதால்  இந்த ஐந்தாம் நாள்  பதிவுகளை மூன்று பாகங்களாக பதிவிட உள்ளேன்.  இப்பதிவில் உள்ள கோலங்கள் எல்லாம் மண்டப காட்சிகள். ஐந்தாம் நாள் இரவு தொண்டை மண்டலத்தில் எப்போதும் விசேஷ  உற்சவம். பஞ்ச மூர்த்திகளும் தம்முடைய வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். இவ்வாலயத்திலும் ஐந்தாம் நாள் இரவு, விநாயகர் மூஷிக வாகனத்திலும், பிரதோஷ மூர்த்தி ரிஷப வாகனத்திலும்,   முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும், தேவியர் இருவரும்  பச்சை மயில் வாகனத்திலும். எல்லா நாட்களையும் விட சிறப்பு அலங்காரம் இன்றுதான். 


விநாயகர், சிவ சக்தி, வள்ளி நாயகி


தெய்வ நாயகி -  சண்டிகேஸ்வரர் 


சிவ சுப்பிரமணிய சுவாமி 




                                                                   தெய்வ நாயகி -  சண்டிகேஸ்வரர் 



சிறப்பு அலங்காரத்தில் சிவசுப்பிரமணிய சுவாமி கீழே உள்ள படம்  அச்சிட ஏதுவாக திருத்தப்பட்ட படமாகும்.


ஐந்தாம் திருநாள் அருட் கோலங்கள் தொடரும்.....

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -8

நான்காம் திருநாள் மாலை நாக வாகன சேவை -2

காலை வெள்ளித் தொட்டி உற்சவம் 

தெய்வ நாயகி 

வள்ளி நாயகி 

 முருகருக்கு பன்னிரண்டு திருக்கரங்கள் , இவை நமது தமிழின் பன்னிரண்டு உயிர் எழுத்துக்கள், பதினெட்டு திருக்கண்கள்  அவை பதினெட்டு மெய் எழுத்துக்கள், ஆறு திரு முகங்கள்  அவை வ்ல்லினம், மெல்லினம், இடையினம் என்னும் ஆறு எழுத்துக்கள்.  முருகனது வேல் நமது ஃ என்னும் ஆயுத எழுத்து. 

முருகு என்னும் முருகனது நாமமே "மு" என்னும் மெல்லின எழுத்து, "ரு" என்னும் இடையின  எழுத்து, மற்றும் "கு" என்னும் வல்லின எழுத்தால்  உருவானது தானே.  ஆகவேதான் நாம் அவரை தமிழ்க் கடவுள் என்று போற்றுகின்றோம்.   

 
காளீங்க நர்த்தனராக  சிவ சுப்பிரமணிய சுவாமி 


புல்லாங்குழல் ஊதிக்கொண்டு  காளியன் மேல் நடனமாடிக்கொண்டே திருமுருகன் தரும் அற்புத காட்சியை தாங்கள் தரிசனம் செய்கின்றீர்கள். மேல் திருக்கரங்களில்  விஷ்ணு அம்சமான சங்கு சக்கரங்களையும் புல்லாங்குழலில் உள்ள  பதக்கங்களையும் காண படங்களை பெரிதாக்கிக் காணுங்கள் அன்பர்களே. 


மன இருள், அறியாமை, துன்பம், ஆகியவற்றை நீக்குபவர் முருகன். பரமஞான மூர்த்தியான தந்தைக்கே உபதேசம் செய்த ஞான பண்டித சுவாமி. சக்தி ஆயுதம் ஞான வேல் 


நாக வாகன சேவை 

கோடிக்கோடி மன்மத லாவண்யம், ஞானத்தை மற்றவர்க்கு வழங்கும் குருநாதர்தான் சுப்பிரமணிய சுவாமி. அஞ்ஞான இருளுக்கு அப்பால் இருக்கின்ற ஞானஜோதிதான் சுப்பிரமணிய சுவாமி.