Monday, November 7, 2011

அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -7

அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் ஆலய தக்ஷிணாயண பிரம்மோற்சவ புண்ய கால பிரம்மோற்சவ பெருவிழாவின் நான்காம் நாள் காலை சந்திரசேகரர் பவழக்கால் சப்பரத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். அன்று இரவு பஞ்ச மூர்த்திகள் பவனியில் ஐயனும் அம்மையும் நாக வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். அந்த அற்புத காட்சிகளை இப்பதிவில் காணுங்கள் அன்பர்களே.


கணேசர்

இனி இத்திருக்கோவிலில் நடைபெறும் ஆன்மீக நிகழ்வுகளைப் பற்றி காண்போமா?

தினமும் உச்சிக் கால பூஜைக்குப்பின் 50 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகின்றது.

பிரதி வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை குழந்தைகளுக்கு இலவச ஆன்மீக வகுப்பு நடத்தபப்டுகின்றது.

பிரதி வெள்ளிக்கிழமை இரவு திருவாசகம் தொடர் சொற்பொழிவு முனைவர் திரு. அரங்க. இராமலிங்கம் அவர்களால் நடத்தப்படுகின்றது.


நாக வாகனத்தில் சோமாஸ்கந்தர்

ஐயனின் ஜடாமுடியில் இருந்து ஓடி வரும் கங்கை நதியின் பிரவாகத்தை கண்டீர்களா?





நாகவாகனத்தில் பத்மாசனியாக அகிலாண்டேஸ்வரி





முருகப்பெருமான்

சண்டிகேஸ்வரர்

சோமாஸ்கந்தர் ஓவியம்

அகத்தீஸ்வரரின் பிரம்மோற்சவம் தொடரும்…..

2 comments:

Sankar Gurusamy said...

ஓம் நம சிவாய... அகத்தீசாய நமஹ...

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/

S.Muruganandam said...

ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய