Thursday, November 10, 2011

அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -11



சிவமயம்

திருசிற்றம்பலம்


தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!





அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் தக்ஷிணாயண புண்ய கால பிரம்மோற்சவத்தின் ஏழாம் திருநாள் எல்லா திருக்கோவில்களும் போல திருத்தேரோட்டம். பஞ்ச மூர்த்திகளும் திருத்தேரில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். தேரோட்டம் முடிந்த பின் குளக்கரையில் பஞ்ச மூர்த்திகள் பக்தர்களுக்கு அருட்காட்சி தருகின்றனர் பின்னர் மாலை சிறப்பு அலங்காரத்துடன் திருக்கோவிலுக்கு எழுந்தருளுகின்றனர். அந்த காட்சிகளை கண்டு இன்புறுங்கள் அன்பர்களே.


குளக்கரையில் அகத்தீஸ்வரர்

திருத்தேரோட்டம் என்பது ஐயனின் ஐந்தொழில்களில் சம்ஹாரம் எனப்படும் அழித்தல் தொழிலை குறிப்பது. ஐயனும் அம்மையும் போருக்கு செல்வது போல் நேர்த்தியாக அலங்காரம் செய்துள்ள அழகைக் காணுங்கள்.


ஐயனின் கையில் உள்ள வில் இப்படத்தில் தெளிவாக தெரிகின்றதல்லவா?

போர் கோலத்தில் அன்னை அகிலாண்டேஸ்வரி

சும்ப நிசும்ப, சண்ட முண்ட, ரக்தபீஜ , மஹிசாசுரர்களை சம்ஹாரம் செய்து காத்த கோலத்தில் அன்னை

திருத்தேரில் அன்னை

அம்மனுக்கு அற்புதமான பூந்தேர்


இன்றைய தினம் (10-11-11) துலா( ஐப்பசி) பௌர்ணமி, இன்றைய தினம்தான் அனைத்து உயிர்களுக்கும் அமுதூட்டும் ஐயனுக்கு அன்னபிஷேகம் சிறப்பாக எல்லா சிவாலயங்களிலும் நடைபெறும் நாள். அன்னாபிஷேகத்தின் சிறப்பைப் பற்றி அறிந்து கொள்ள இப்பதிவுவைப் பாருங்கள்.







அகத்தீஸ்வரரின் பிரம்மோற்சவம் தொடரும்…..

No comments: