Monday, June 21, 2010

ஆனந்த நடராஜரின் ஆனி திருமஞ்சனம்

அம்பலத்தாடும் என் ஐயனுக்கு வருடத்தில் ஆறு திருமுழுக்குக்கள் அவற்றுள் இரண்டு பத்து நாள் பிரம்மோற்சவமாக சிறப்பாக கொண்டாடப்படுகின்றன அவையாவன ஆனித்திருமஞ்சனமும், ஆருத்ரா தரிசனமும் ஆகும். 2010 ஆனி உத்திரத்தன்று நடைபெற்ற ஆனந்த தாண்டவரின் ஆனி உத்திர தரிசனத்தின் சிலகாட்சிகள்.

முந்தைய ஆனி உத்திர பதிவுகளைக் காண சொடுக்குங்கள் இங்கே

http://natarajar.blogspot.com/2008/07/blog-post_11.html








சென்னை மேற்கு சைதாப்பேட்டை
காரணீஸ்வரர் ஆலய தரிசனம்

விநாயகப் பெருமான்


ஆனந்த கூத்தனின் அற்புத தரிசனம்

மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட
மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரமனாட


கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட குஞ்சரமுகத்தனாட
குண்டலமிரண்டாட
தண்டைபுலி யுடையாட குழந்தை முருகேசனாட


ஞானசம்பந்தரொடு யிந்திராதி பதினெட்டு முனியட்ட பாலகருமாட
நரை தும்பை யறுகாட நந்திவாகனமாட நாட்டியப்பெண்களாட

வினையோட உனைப்பாட யெனைநாடி யிதுவேளை விருதோடு ஆடிவருவாய்

யீசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!


சிவகாமசுந்தரி அம்பாள்

சூரிய பிரபையில் ஆனி உத்திர தரிசனம்


கோபுரத்துடன் ஐயனின் தரிசனம்



அப்பாநான் வேண்டுதல்கேட்
டருள்புரிதல் வேண்டும்

ஆருயிர்கட் கெல்லாம்நான்
அன்புசெயல் வேண்டும்

எப்பாரும் எப்பதமும்
எங்கணும்நான் சென்றே

எந்தைநின தருட்புகழை
இயம்பியிடல் வேண்டும்

செப்பாத மேல்நிலைமேல்
சுத்தசிவ மார்க்கம்

திகழ்ந்தோங்க அருட்சோதி
செலுத்தியிடல் வேண்டும்

தப்பேது நான் செயினும்
நீபொறுத்தல் வேண்டும்

தலைவநினைப்பிரியாத
நிலைமையும் வேண்டுவனே!

பல்லக்கில் கண்ணாடியில்
சிவானந்தவல்லி தரிசனம்


*******************

சென்னை மேற்கு சைதாப்பேட்டை செங்குந்த கோட்டம் சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயம்


இந்திரியவயம்மயங்கி் இறப்பதற்கே காரணம்ஆய்

அந்தரமே திரிந்துபோய் அருநரகில் வீழ்வேற்குக்

சிந்தைதனை தெளிவித்து சிவம் ஆக்கி எனை ஆண்ட

அந்தல் இலா ஆனந்தம் அணிகொள் தில்லைக் கண்டேனே!




ஆர்த்தபிறவித் துயர்கெடநாம் ஆர்த்து ஆடும் தீர்த்தன்;
நல்தில்லைச் சிற்றம்பலத்தே தீ ஆடும் கூத்தன்;

இவ்வானுலகும் குவலயமும் எல்லோமும்காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி

வார்த்தைகள் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பு அரவம் செய்ய அணிகுழல் மேல் வண்டு ஆர்ப்பப்

பூத்திகழும் பொய்கை குடைந்துஉடையான் பொன்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீர் ஆடேலோர் எம்பாவாய்!


சிவகாமவல்லி தரிசனம்



அம்பலவாணரின் பின்னழகு

"ஓடும்கவந்தியுமே உறவு" என்றிட்டு உள்கசிந்து;

"தேடும்பொருளும் சிவன் கழலே" எனத்தெளிந்து ;

கூடும் உயிரும் குமண்டையிடக் குனித்து: அடியேன்

ஆடும் குலாத்தில்லை ஆண்டானை
க் கொண்டு அன்றே.



4 comments:

Test said...

தாமதத்திற்கு மன்னிக்கவும், தரிசனத்திற்கு நன்றி. புகைப்படங்கள் அருமை, குறிப்பாக கோபுரத்துடன் கூடிய ஐயனின் புகைப்படமும் கண்ணாடியில் அன்னையின் தரிசனமும்...
சிங்கையில் கேய்லங் சிவன் கோவிலில் திருமஞ்சன தரிசனமும் நடனமும் இனிதே நடைபெற்றது.

S.Muruganandam said...

//தாமதத்திற்கு மன்னிக்கவும்//

இங்கேயும் ரிப்பீட்டேய்.

//சிங்கையில் கேய்லங் சிவன் கோவிலில் திருமஞ்சன தரிசனமும் நடனமும் இனிதே நடைபெற்றது//

வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா என்ற பாடல் தான் நினைவிற்கு வருகின்றது.

தென்னாடுடைய சிவன் உலகமெங்கும் கோவில் கொண்டு அருள் புரிகின்றார். மிக்க மகிழ்ச்சி ஐயா.

Jayashree said...

ஓவ்வொரு அலங்கார தரிசனத்துக்கும் ஏற்ற பாடல்கள்!!. வள்ளலாரின் அப்பா நான் அருமை. அந்த தரிசனத்துக்கு ஆடிய பாத மன்றாடிய பாதமும் பொருந்தி இருக்கும்:)) படங்கள் வழக்கம்போல் beautiful!!

S.Muruganandam said...

//அந்த தரிசனத்துக்கு ஆடிய பாத மன்றாடிய பாதமும் பொருந்தி இருக்கும்//

அடுத்த தடவை ஆடிய பாதத்தை போட்டு விடலாம். ஆருத்ரா தரிசனம் வரை பொருத்திருக்கவும் ஜெயஸ்ரீ.