Friday, May 1, 2009

திருக்காரணி நூதன மாவடி சேவை

முதல் நாள் மாலை நூதன மாவடி சேவை

தொண்டை மண்டலத்தில் முதல் நாள் இரவு சிவ பெருமான் அத்தலத்தின் ஸ்தல விருக்ஷத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.அக்காலத்தில் நம் முன்னோர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தார்கள். ஒவ்வொரு திருத்த்லத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட தீர்த்தங்கள் என்னும் திருக்குளங்கள் இருந்தன. கோயில் வனத்தில் அமைந்திருந்தன. நன்மை பயக்கும் மரங்கள் காப்பாற்றப்பட்டன. தேவேந்திரன் மா வனத்தில் சிவ பூஜை செய்ததால் காரணீஸ்வரத்தின் ஸ்தல விருக்ஷம் மா மரம். எனவே காரணீஸ்வரர் புஷ்ப அலங்காரத்துடன் நூதன மாவடி சேவை தந்தருளுகின்றார்.

மாவடி சேவைக்காக புறப்படும் பஞ்ச முர்த்திகள்

சிவ சக்தி தரிசனமே என்ன அற்புதம்



நூதனம் என்றால் புதியது என்று பொருள். மற்ற தலம் போல் இல்லாமல் மாமரம் வருடா வருடம் உண்மையான மரத்தில் இருந்து எடுத்துக் கொண்டு வந்து அலங்காரம் செய்கின்றனர் திருக்கரணீஸ்வரத்தில் எனவே மாம்பழங்களையும் தாங்கள் காணலாம். எனவேதான் நூதன மாவடி சேவை என்றழைக்கப்படுகின்றது.

காரணீஸ்வரர் நூதன மாவடி சேவை

திருக்காரணியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் சொர்ணாம்பிகையின் மேல்

அனுமந்தபுரம் அருட்கவி ஸ்ரீ காளிதாசர் அவர்கள் நவரத்ன மாலை பாடியுள்ளார். அம்மாலையின் ஒவ்வொரு இரத்தினத்தை ஒவ்வொரு நாளும் சேவிப்போம்.


திருக்காரணி சொர்ணாம்பிகை நவரத்ன மாலை

காப்பு
ஆக்கும் மணி மாலை ஆணை முகன் தாள் பணிந்து
கோக்கும் படி சிந்தை கூடுவாம் - பூக்குமே
நற்குடி வாழ் நனி நல்லதிருக் காரணிப்
பொற்கொடி
சூடும் பொருட்டு.

மாணிக்கம்

நிழலாய் விளங்கி நின்றென்றும்
நினையே நெஞ்சில் நினைவேற்கு
நிதியாய் நோற்றுப் பணிகின்ற
நிட்டை நிதஞ்சேர் நான்முகியே


குழகன் அணியுங் கொன்றைத்தார்க்
குழலாய் கோலத்தொழிலோடு
குறையில் மாணிக்கமே சூட

குன்றாக் குழையைக் கொண்டனையோ


வழகார் இதயம் வாழ்கின்றாய்
வரையோன் பெற்ற வார்ச் சடையாய்
வளங்கொள் நின்றன் விளையாட்டின்

வண்ணம் உலகாம் வான்முகிலே


அழகார் மதுரை மீனாட்சி
அறங்கூர்ச் சைதைப் பொற்கொடியே
அடிமை கொண்டாய் அருள்வாமி
அன்னாய் சிவசொர் ணாம்பிகையே. (1)




சிவ சுப்பிரமணிய சுவாமி

No comments: