Tuesday, April 15, 2008

சித்திரைத் திருவிழா காரணீஸ்வரம் - 6

காரணீஸ்வரத்தில் ஐந்தாம் நாள் காலை உற்ச்வம் சிவிகைகள். பஞ்ச மூர்த்திகளும் பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா வருகின்றனர்.


உச்சி காலத்தில் பஞ்ச மூர்த்திகளுக்கும் மஹா அபிஷேகம் நடை பெறுகின்றது. அலங்கார மண்டபத்தின் முகப்பில் பஞ்ச மூர்த்திகளுக்கும் ஏக காலத்தில் நதியாய்ப் பாயும் திரவியங்களினால் அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகின்றது சித்திரைத் திருவிழாவின் ஐந்தாம் நாள்.





ரிஷப வாகனத்தில் விநாயகர்


இத்தலத்தில் ஐயனின் ரிஷப வாகன சேவையன்று விநாயகரும் ரிஷப வாகன சேவை தந்தருளுகின்றார்.





ரிஷப வாகன சேவைக்காக புறப்படும் காரணீஸ்வரர்

நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய மஹா தேவாய த்ர்யம்பகாய
த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய காலாக்னி ருத்ராய நீலகண்ட்டாய
ம்ருத்யுஞ்சயாய சர்வேஸ்வராய சதாசிவாய ஸ்ரீமந் மஹா தேவாய நம:





மஹா திரிபுர சுந்தரி சிவ சொர்ணாம்பிகை


அழகன் முருகன்


பொதுவாக மாலை புறப்பாட்டிற்க்கு முன் அலங்காரம் முடிந்தவுடன் முதலில் பஞ்ச மூர்த்திகளுக்கு பூஜை நடைபெறுகின்றது. சகல தீப உபசாரம் முதலில், பின்பு சோடச உபசாரம், பின்பு வேதமும் தேவார திருவாசம் ஓதப்படுகின்றது.



பின்னர் ஐயன் உட்புறப்பாடு கண்டருளுகின்றார், அதாவது திருக்கோயிலை வலம் வந்து யாக சாலையின் முன்னர் எழுந்தருளுகின்றார்கள் பஞ்ச மூர்த்திகள், கும்பத்தில் அரூபமாக எழுந்தருளியுள்ள இறைவனே வெளியே உருவமாக காட்சி தந்து கொண்டிருக்கிறார். ஒரே சமயத்தில் தீபாராதாணை நடைபெறுகின்றது.



யாக சாலையை விட்டு புறப்பட்டு வாகனத்தை அடைவதற்கு ஆனந்த தாண்டவக் காட்சி தந்தருளுகின்றார் ஆடல் வல்லான். பாம்பு நடனம், காவடி சிந்து, இராஜ நடை, என்று எழிலாக திருக்காட்சி தந்த பின் வாகனத்திற்கு எழுந்தருளுகின்றார்கள் பஞ்ச மூர்த்திகள். வாகனத்தில் பின் அலங்காரம் ஆகி திரு வீதி உலாவிற்காக திருக்கோவிலை விட்டு வெளியேறும் போது கோபுர வாசலில் தீபாராதணை நடை பெறுகின்றது. கோபுர வாசல் தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஐதீகம்.



கோவிலின் வெளியே பின் மின் அலங்காரங்கம் செய்யப்ப்ட்டு திருவீதி உலா நடைபெறுகின்றது. பவனி முடிந்து கோவில் வாசலுக்கு ஐயன் வந்தவுடன் அவருக்கு அமுது படைக்கப்பட்டு கும்ப தீபாரதனை நடைபெறுகின்றது. பின்னர் வாகனங்களிலிருந்து இறங்கி அலங்கார மண்டபம் எழுந்தருளுகின்றனர் மூர்த்திகள்.



இந்தப் பதிவில் தாங்கள் காண்பவை அலங்கார மண்டபத்தில் திருவீதி உலாவிற்கு முன்பு ஐயன் அளிக்கும் அருட்காட்சி.



வெள்ளி ரிஷப வாகன சேவையை அடுத்த பதிவில் காணலாம்.

No comments: