Saturday, December 8, 2007

நடராஜ தத்துவம்


நடராஜ தத்துவம்
கொடிமேல் இடபமும் கோவணகீளும் ஓர் கொக்கிறகும்
அடிமேல் கழலும் அகலத்தினில் நீறும் ஐவ்வாய் அரவும்
முடிமேல் மதியும் முருகலர் கொன்றையும் முவிலைய
வடிவேல் வடிவும் என் கண்ணுள் எப்போதும் வருகின்றனவே!


நடராச பெருமானின் திருவுருவில் பஞ்ச பூதங்கள், அஷ்ட மூர்த்திகள், அனைத்து தெய்வ அம்சம், அண்ட சராசரங்கள், அனைத்து தெய்வ தத்துவங்களும் அடக்கம் அவற்றை விரிவாக காண்போம்.


1. இளம் பிறை : தக்கன் சாபம், காம தகனம், உயிர் வளர்ச்சி, ஒளஸதி நாதன்.



2. மயிலிறகு : கிராதார்ஜுனம்



3. கொக்கிறகு : குண்டாசுரவதம், அரசத்தன்மை.




4.இடக்கண் : சந்திர மண்டலம், இடநாடி, இச்சா சக்தி.




5.வலக்கண் : சூரிய மண்டலம், பிங்கலை நாடி, ஞான சக்தி.




6. நுதல் விழி : அக்னி அம்சம், கழுமுணை நாடி, காம தகனம், கிரியா சக்தி.




7.திருநீறு : பிருத்வி தன்மை, லய சிருஷ்டி, திரிபுரமெரித்தல், திரி சத்யம், சுடலையாடல்.




8. காபாலம்: பிரம்மச் சிரச்சேதம், பிக்ஷ‘டணர்.




9. ஊமத்த மலர் : அஷ்ட மூர்த்தம்.




10.கங்கை : ஜலமய மூர்த்தம், கங்காதரர், பாவ விமோசனம்.




11.நுண் சிகை : தக்ஷ’ணா மூர்த்தி, ஞானம்.




12.கொன்றை மலர்: கற்பக வல்லி




13: துடி : தோற்றம், ஆக்கல் தொழில், துடியாடல்.




14. தீயகல் : சம்ஹாரம், அழித்தல் தொழில், தீ-எரியாடல்.




15. குழை - இடது காது, சக்தி அம்சம், அர்த்தநாரீஸ்வரர், பிரக்ருதி.




16:தோடு - வலது காது, சிவ அம்சம்.




17. நீலகண்டம் - அமிர்தம் கடைதல்,சமன் பாட்டி நிலை, தீதகற்றல், அமரத்துவம், தியாக ராஜ மூர்த்தம்.




18.கபால மாலை - பிரம்ம கர்ப கழிவு, யுகாந்தரம்.




19.ஆதி வராக கொம்பு - வராக அவதாரம், பிரபஞ்ச சமநிலை.




20. ஆமை ஓடு - விஷ்ணு அம்சம், கூர்மாவதாரம், பிரபஞ்ச காவல்.




21. நரசிம்மரின் குருதித் தோல் - நரசிம்மாவதாரம், சரப மூர்த்தம்.




22. அபய கரம் - காத்தல் தொழில், சுப மூர்த்தம்.




23. அரவணி - நாக சக்தி, ஜ“வாத்மா, குண்டலிணி.




24.கரங்கள் - விராட புருடத்தன்மை.




25.தோள்கள் - திரிவிக்ரம நிலை, திசைகள், காற்று.




26:பூநூல் - நாயகத்தன்மை, வேதந்தம்.




27: உதர பந்தம்( அரை ஞாண்) : வேக மூர்த்தம்.




28. கஜ ஹஸ்தம் (வீசு கரம்): திருவடி காட்டல், இன்ப வழி காட்டி.




29.திருவுடல் : ஆகாயம்.




30.புலியதளாடை - தாருகாவனம், பிக்ஷ‘டணர்.




31.யானை உரி : கஜ சம்ஹாரம், மாயா மலம்.




32. ஊர்த்துவ மேரு: உலகோற்ப்பதி, பிக்ஷ‘டணர் துறவு.




33.கோவணம் - தூய ஞானம்.




34. குஞ்சித பாதம் : சிதம்பர மகாத்மியம், அருளல் தொழில்.




35.சிலம்பு - வேதங்கள் (இடது), கேளா ஒலி




36. கழல் - வீரட்டம், பிறப்பறுத்தல், பதிநிலை, புருடன்.




37.வீர கண்டாமணி - வீரம், திருவுரு, வெற்றித் திறன்.




38.ஸ்தித பாதம் - ஊன்றிய திருவடி, காலாந்தகர், மறைத்தல் தொழில், பதி நிலை, நிலம், வினைப்பயன் ஊட்டல்.




39.முயலகன் - கோயிற் புராணம், தாருகா வனம், மும்மலம்.




40.திருவாசி - இரண்ய கர்ப்பம், பிரபஞ்சம், பூரணத்துவம்.




41.திருவாசி சுடர் - த்வனி, பீஜ மந்திரங்கள்.




42.கமல பீடம் - தகராலயம், இதய கமலம், சகஸ்ராரம்.




புருஷார்த்தங்கள் : அறம்- தமருக ஓசை, பொருள் -அக்னி, இன்பம் - அபய கரம், வீடு- திருவடிகள்.




இறைவனது திருமுடியை அழகு செய்யும் புஷ்பங்கள்: பாகா, துரோணா, ஊமத்தை, சுமானா, பாடலம், பத்மம், உத்பாலம். கொன்றை- சிதம்பர ரகசியத்தில் தங்க தளங்களாக தொங்குபவை வில்வ தளம் என்றும், கொன்றை மலர் என்றும் கூறுவர். இம்மலரை சிவபெருமானுக்கு சாற்றுபவர்கள் சாலோக, சாமீப, சாரூப, சாயுச்ய பதவிகளை அடைவர் என்று புஷ்ப பலன் கூறுகின்றது.

* * * * * * *
உபநிடதங்களில் சிதம்பரம்:
சிதம்பரத்தை சாம வேதீய சாந்தோக்கிய உபநிடதம் 'சத்' என்றும் 'சபா' என்றும் கிருஷ்ண யஜுர் வேதிய சுவேதாசுவரோபநிடதம் 'பரம்' என்றும் 'சத்தியம்' என்றும், சுக்ல யஜுர்வேத பிரகதாரண்ய உபநிடதம் 'மகத்' என்றும். கைவல்யோபநிடதம் 'விவிக்தம்' என்றும் அற்புதம் என்றும், சாந்தோக்கியம் 'புண்டரீகம்' என்றும், தைத்திரீயம் 'குகை' என்றும் 'ஞானானந்தம் ' என்றும் 'பரம்', 'வியோமம்' என்றும் ' பரமாலயம்' என்றும் பிரகதாரண்யம் 'சுத்தம்' என்றும், தலவகாரோபநிடதம் 'சத்தியமாதனம்' என்றும் கூறுகின்றது.
* * * * * * *

தங்கள் வருகைக்கு நன்றி. மாதங்களில் சிறந்த மார்கழி வருகின்றது திருப்பாவை, திருவெம்பாவை அதி காலையில் பாராயணம் செய்யவும், ஐயனின் ஆருத்ரா தரிசனத்தைக் காணவும் திரும்பி வாருங்கள்.

4 comments:

Anonymous said...

Lovely Images of the lord. Thanks..I donot read this language...but felt nice to see them.

S.Muruganandam said...

Thank you Anjali, So that only I tend to write in both English and Tamil. Atleast the headings I will give in English. The first two postings are in English you can read them.

Mari said...

108 உபநிடதங்களுமே பிரமாணமா

S.Muruganandam said...

மேலே தந்துள்ள உபநிடதங்கள்.